“பிள்ளை பேறு வேண்டுமா..!” – அப்ப கட்டாயம் ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள்.. போய் தரிசனம் செய்யுங்க..!

திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் உங்களுக்கு பிள்ளை பேறு கிடைக்கவில்லையே என்று ஏக்கத்தில் தவிப்பவர்களா?.

எண்ணற்ற கோயில்களுக்கு சென்றும் ஜாதகத்தை பார்த்து அதற்குரிய பரிகாரங்களை செய்தும் பலன் இல்லை என்று ஏக்க பெருமூச்சு விடுபவர்கள் கட்டாயம் இந்த சுந்தர வரதராஜ பெருமாளை தரிசிப்பதின் மூலம் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு நீங்கள் நினைக்கும் பிள்ளை பேரு உங்களுக்கு கிடைக்கும்.

இந்த கோயிலானது திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய திருக்கோயிலான இதில் ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் சன்னதி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த திருக்கோயிலில் காலை வாகனம் உடைய சிவனும் குபேரனும் இந்திரனும் சேர்ந்து அருள் வாழ்கிறார்கள். மேலும் இந்த கோயிலில் திருமகள், நாமகள், துர்க்கை ஆகியோர் நித்தியவாசம் செய்ததாக கோயிலின் வரலாறு கூறுகிறது.

ஆரம்ப நாட்களில் கருவறையில் சுவாமி நின்ற காலத்தில் இருந்த பொழுது உடன் தாயார் இல்லாத நிலையில் அந்தணர்கள் அதிக அளவு வாழ்ந்து வந்த எந்த பகுதியில் அவர்கள் தாயாரை பிரதிஷ்டை செய்து வணங்கி இருக்கிறார்கள். அதுவும் ஒரே கல்லில் இவரது சிலை வடிவமைக்கப்பட்டிருப்பது மிக முக்கியமான விஷயமாகும்.

மேலும் இந்தக் கோயிலில் கருடாழ்வார் மண்டியிட்டு வணங்கியபடி இருப்பது மற்றொரு சிறப்பான ஒரு அமைப்பு என்று கூறலாம். இத்தலத்தில் இருக்கும் சுவாமிக்கு பிள்ளை பேரு நாயகன் என்ற மற்றொரு பெயரும் உள்ளது. எனவே இந்த கோயிலுக்கு வந்து மனதார நீங்கள் வேண்டிக் கொள்ளும் போது புத்திரப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இக்கோவிலில் நடத்தக்கூடிய அன்னக்கூடா உற்சவ விழா மிகவும் சிறப்பான நிகழ்வாக உள்ளது. இந்த விழாவில் சுவாமி முன்பு வேட்டியில் சாதத்தைக் கொட்டி அதன் மீது நெய் உள்ளிட்ட பொருட்களை போடுவார்கள். பிறகு அருகில் வைக்கப்பட்டிருக்கும் சாம்பார் பாத்திரத்தில் இருந்து சாம்பாரை எடுத்து சாதத்தில் கொட்டி அதை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவார்கள்.

எனவே பக்தர்கள் அனைவரும் பிள்ளை பேறு வேண்டி எந்த கோயிலுக்கு செல்வதின் மூலம் அவர்கள் கோரிக்கை விரைவில் நிறைவேறும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …