“யப்பா.. ஜிம் உடையில் கும்மென…” சீரியல் நடிகை ஸ்ரீதேவி அஷோக்..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் தன்னை ஒரு சீரியக் நடிகையாக அறிமுகப்படுத்திக் கொண்ட நடிகை ஸ்ரீதேவி அசோக் தொடர்ந்து பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், வாணி ராணி, கல்யாணபரிசு, ராஜா ராணி உள்ளிட்ட சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

இவர் நடித்ததிலேயே இவருக்கு சிறப்பான கதாபாத்திரம் அமைந்த சீரியல்கள் என்றால் அது தங்கம் மற்றும் கல்யாணபரிசு உள்ளிட்ட சீரியல்கள் தான். இதனை அவரே ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்.

மேலும் தற்பொழுது பூவேஉனக்காக என்ற சீரியலில் நடித்து வரும் இவர் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியல்களிலும் நடித்து வருகிறார். மேலும் திரைப்படங்களிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார் நடிகை ஸ்ரீதேவி அசோக்.

அந்தவகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படத்தில் அவருடைய தங்கையாக நடித்திருந்தார். தொடர்ந்து தேவதையை கண்டேன் திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாகவும் நடித்திருந்தார்.

சினிமா சீரியல் என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் இவர் சமீபத்தில் ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தார். தன்னுடைய கர்ப்பம் தரித்த நாளிலிருந்து குழந்தை பிறக்கும் வரை ரசிகர்களிடம் தன்னுடைய மகிழ்ச்சியையும் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகின்ர்து வந்த இவர் தன்னுடைய குழந்தைக்கு சித்தாரா என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடிவிட்டது காரணமாக தற்போது கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தன்னுடைய உடல் எடையை குறைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

அதேபோல உடல் எடையை குறைத்தும் இருக்கிறார். அந்தவகையில், உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்யும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் ரசிகர்களுக்கும் உடற்பயிற்சி மீதான ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்திருக்கிறது. இந்த புகைப்படங்களில் இருக்கும் நடிகை ஸ்ரீதேவி அசோக்கை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …