ராஜா ராணி என்ற சீரியலில் வில்லியாக நடித்து கலக்கிய பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக் சின்னத்திரையில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சினிமா நடிகை ரேஞ்சுக்கு பிரபலமாக இருப்பவர் அம்மணி.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சீரியல் மட்டும் இல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
அந்த வகையில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படத்தில் சினிமா உலகிற்கு காலடி எடுத்து வைத்தார். அதன் பிறகு சீரியல் பக்கம் திரும்பிய இவர் கஸ்தூரி, இளவரசி, வாணி ராணி என 20-க்கும் மேற்பட்ட சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இவர் எத்தனை சீரியலில் நடித்து இருந்தாலும் கூட இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது ராஜா ராணி சீரியலில் இவர் நடித்த வில்லி கதாபாத்திரம் தான் இந்த வில்லி கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது என்று கூறலாம்.
சமீபத்தில் அசோக் சிங்டலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தான் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்களுக்கு அறிவித்தார் சமீபத்தில் ஒரு பெண் குழந்தைக்கு தாயான இவர் திருமணம் குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறியிருக்கிறார்.
இந்நிலையில் உடலோடு ஒட்டிய இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய உடல் வாகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.