“சின்ன வயசுல இருந்தே.. குளிக்கும் போது.. நான் அதை பண்ணது இல்ல..” – ஓப்பனாக கூறிய ஸ்ரித்திகா.!

சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரித்திகா. தொடர்ந்து கலசம், கோகுலத்தில் சீதை, உறவுகள், சங்கமம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது மகராசி என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை ஸ்ரித்திகா. இவர் சின்னத்திரைக்கு வந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால் கூட இன்னும் அதே இளமையுடனும் பொலிவுடனும் இருக்கிறார்.

இது குறித்து சமீபத்தில் இவருடைய இளமையின் ரகசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய பொழுது அதற்கு பதில் அளித்த நடிகை சில விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

பொதுவாக தங்களுடைய அழகின் ரகசியம் குறித்து நடிகைகள் பொதுவெளியில் பேச மாட்டார்கள். அப்படியே பேசினாலும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் நீங்கள் இளமையுடன் இருக்கலாம் என்று கூறிவிட்டு கடந்து சென்று விடுவார்கள்.

ஆனால் உண்மை அது கிடையாது. இந்நிலையில் நடிகை ரித்திகா தன்னுடைய இளமையின் ரகசியம் கொடுத்து பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியதாவது நான் சின்ன வயசில் இருந்தே.. குளிக்கும்போது சோப் பயன்படுத்துவது கிடையாது.

அதற்கு பதிலாக என்னுடைய அம்மா கடலை பருப்பு.. பாசி பருப்பு பாதாம் பருப்பு உள்ளிட்டவற்றை நன்கு காய வைத்து அரைத்து வைத்திருக்கும் மாவை கொண்டு தான் குளிப்பேன்.

அதிகமாக மேக்கப் போடுவது எனக்கு பிடிக்காது உதட்டிற்கு தடவ கூடிய லிப் பாம் மற்றும் கண்களுக்கு காஜல் மட்டும் தான் போடுவேன். ஷூட்டிங் போகும்போது கூட லைட்டாக தான் மேக்கப் போடுவேன்.

அதேபோல மேக்கப்பை எடுப்பதற்கு பலரும் வேதிப்பொருட்கள் கலந்த திரவத்தை பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதை நான் பயன்படுத்துவது கிடையாது தேங்காய் எண்ணெயைத் தான் நான் பயன்படுத்தி வருகிறேன். வெயிலில் முகம் டேன் ஆகிவிட்டால் தயிரில் எலுமிச்சை கலந்து தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து முகத்தை கழுவினால் சரியாகிவிடும் என்று கூறுகிறார் நடிகை ஸ்ரித்திகா.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …