காபி வித் காதல் ஊத்திக் கொண்டால் என்ன? வெற்றி பெற அஸ்திரமாக வரலாற்று படத்தை எடுக்கப் போகும் சுந்தர் சி…!!

மாபெரும் எதிர்பார்ப்பில் களம் கண்ட காபி வித் காதல் சுந்தர் சி படம் தற்போது மாபெரும் தோல்வியை அடைந்துள்ளது. இந்த தோல்வியை சரி கட்ட தற்போது சுந்தர் சி ஒரு புதிய திட்டத்தை போட்டிருக்கிறார்.

 அந்தத் திட்டம் என்னவென்றால்  தற்போது திரை உலகில் வரலாற்று படங்கள் மாபெரும் ஹிட் அடித்து வருவதால் ஏற்கனவே நான்கு வருடங்களாக கிடப்பில் போட்டு இருக்கக்கூடிய வரலாற்று படத்தை தற்போது சுந்தர் சி இயக்கலாம் என்ற முடிவில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

 இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் ஜெயம் ரவியை வைத்து மிகப்பிரமாண்டமான வரலாற்று காவியமான சங்கமித்திரா என்ற படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.

 ஆனால் எதிர்பாராத விதமாக அந்தப் படத்தை எடுப்பது அப்போது தடை பட்டு போனது. இந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மீண்டும் இந்த படப்பிடிப்பை தொடங்கலாமா என்ற எண்ணத்தில் சுந்தர்சி இருப்பதாக உள்ளது. மேலும் மிகப் பெரிய பட்ஜெட்டில் தான் இந்த படத்தை தொடங்க வேண்டி உள்ளது.

எனவே லைக்கா நிறுவத்துடன் உதயநிதியும் கைகோர்த்து எந்த படத்தை தயாரிக்கலாம் என்று சுந்தர் பி பேச உள்ளதாக தகவல்கள் வெளிவந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நிறுவனங்கள் எந்த படத்தை தயாரிப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

 மேலும் இந்த படத்திற்கான கிராபிக்ஸ் மற்றும் டெக்னிக்கல் வேலைகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறதாம். இதனால் படப்பிடிப்பு தொடங்கிய உடனே படத்தை எளிதாக முடித்து விடலாம் என்று சுந்தர் சி கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் ஆர்யா மற்றும் ஜெயம் ரவி தான் தற்போது நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

காமெடி மட்டும் கையில் வைத்துக்கொண்டு இதுவரை ஜெனரஞ்சகமான படங்களை குறித்து வெற்றி பெற்ற சுந்தர் சி இந்த வரலாற்று படத்தை எடுக்க உள்ளதால் இந்தப் படமும் காபி வித் காதல் படத்தைப் போல சொதப்பி விடக்கூடாது என ரசிகர்கள் சுந்தர் சிக்கு வேண்டுகோள் விடுத்து வைக்கிறார்கள்.

 எனவே மிக விரைவில் ஏ ஆர் ரகுமான் இசையோடு இணைந்து இந்த திரைப்படம் வெளிவரும் என்பது தற்போது உறுதியாகிவிட்டது. மீண்டும் ஒரு வரலாற்று காவியத்தை தமிழக மக்கள் கண்டிப்பாக பார்க்கப் போகிறார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …