அடுத்தடுத்த தோல்வியால் துவண்டு இருக்கும் சுந்தர் சி…. லெஜெண்ட் அண்ணாச்சி வைத்து காய் நகர்த்த முயற்சி செய்கிறாரா?

முறைமாமன், உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம் நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல பெற்று படங்களை கொடுத்து திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர் தான் இயக்குனர் சுந்தர் சி.

 மேலும் இவர் படங்களை இயக்குவதோடு நின்று விடாமல் சில வருடங்களாக நடிப்பில் கவனத்தை செலுத்தி வந்தார். இதனை அடுத்து மீண்டும் இவர் அரண்மனை, கலகலப்பு போன்ற ஹிட் படங்களை கொடுத்த இவருக்கு தொடர்ந்து படங்கள் தற்போது தோல்வியை தழுவி வருகிறது.

 அதற்கு உதாரணமாக அண்மையில் இவர் இயக்கிய அரண்மனை 2, கலகலப்பு 2, காபி வித் காதல் போன்ற படங்களை கூறலாம். மேலும் சமீபத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளி வந்த காபி வித் காதல் படம் சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை.

 இதனால் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரக்கூடிய சுந்தர் பி அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்து வரும் வேளையில் லெஜன்ட் அண்ணாச்சியை சந்தித்து பேசி இருக்கிறார்.

 இதனை அடுத்து இவர் எதற்காக லெஜெண்ட் அண்ணாச்சியை சந்தித்து பேசி இருக்கிறார் என்று கோடம்பாக்கம் முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்டு வரக்கூடிய நிலையில்  தற்போது இவரது கனவு படமான வரலாற்று காவியமான சங்கமித்ராவை படம் பிடித்தால் என்ன என்ற எண்ணத்தில் இருக்கிறார்.

 ஏற்கனவே பல ஆண்டுகளாக திட்டமிட்டு இந்த படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்த இவருக்கு போதிய நிதி இல்லாத காரணத்தினால் தான் அந்த படத்தை அப்படியே தள்ளிப்போட்டு வைத்திருக்கிறார்.

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவர இருக்க கூடிய இந்த படம் விரைவில் எடுக்கப்படலாம் என்ற சூழ்நிலையில் இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, சுருதிஹாசன் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். பதினெட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த இந்த கதை புனைவு கதையாகும்.

 எனவே இந்த படத்தினை எடுப்பதற்கான தொகையை பெறுவதற்கு கூட இவர் அண்ணாச்சியை சந்தித்து இருக்கலாம் என்ற பேச்சு தற்போது எழுந்துள்ளது. அல்லது சங்கமித்ரா படத்தில் அண்ணாச்சியை சுந்தர் சி நடிக்க வைக்க போகிறார் என்ற தகவல்களும் வெளிவந்துள்ளது.

 இதை அடுத்து ஏற்கனவே சங்கமித்ராவில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கும் போது லெஜெண்ட் சரவணனுக்கு இந்த படத்தில் எப்படிப்பட்ட கேரக்டர்? அதை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்களோ என்று தெரியவில்லை .

லெஜென்ட் திரைப்படத்திற்கு பிறகு அண்ணாச்சியும் படத்திற்கான கதையை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார். எனவே அண்ணாச்சியை வைத்து ஒரு முழு நீள நகைச்சுவை படமும் எடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

 சோ இந்த மூன்று காரங்களை காரணங்களைக் கொண்டுதான் அவர் லெஜெண்டை சந்தித்திருக்கலாம் என்று பேசிக்கொள்கிறார்கள். எனினும் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …