விரைவில் சிங்கம் 4 படத்தில் இணையும் சூர்யா… ஹரி கூட்டணியில் மாஸாக…!!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு சூர்யா நடித்து வெளிவந்த படம் தான் சிங்கம் இந்தப் படத்தில் மாபெரும் மாஸை காட்டி போலீஸ் அதிகாரியாக சூர்யா நடித்திருப்பார்.

 இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தை சிங்கம் 2 சிங்கம் 3 என்று தொடர்ச்சியாக சூர்யா கூட்டணியில் கொடுத்து மாபெரும் வெற்றியை ரசிகர்கள் மத்தியில் இவர் படைத்து விட்டார்.

 மேலும் சிங்கம் 3 படத்துக்கு பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் இடையில் ஏற்பட்ட சில கருத்து வேற்றுமை காரணமாக அந்த படம் பிரச்சனையில் அப்படியே நின்று போய்விட்டது.

 இதனை அடுத்து தற்போது சூர்யா ஹரி கூட்டணி இணைய போவதாக தகவல்கள் தீயாய் பரவி வருகிறது. அதுவும் சிங்கம் 4 படத்திற்காக தான் மீண்டும் அவர்கள்  இணைகிறார்களாம்.

 இதனை அடுத்து ஹரி இதற்கான கதையை தயார் செய்து வருவதாகவும், சூரியா தன்னுடைய கமிட்மெண்ட் அனைத்தையும் முடித்துவிட்டு பின் சிங்கம் 4 படத்தில் நடிக்க போவார் என்று தெரியவந்துள்ளது.

 இந்த தகவல் உண்மையானதா இல்லையா என்பது அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரியாத நிலையில்… பொருத்திருந்து பார்த்தால் இதற்கான அறிவிப்பு வெளிவருமா அல்லது இது வெறும் டுபுக்கு தானா என்பது விரைவில் புரியும்.

மேலும் சிங்கம் படம் ஆரம்பித்த முதலிலேயே பாகம் 2 பாகம் 3 என்று பட்டையை கிளப்பி இருக்கும்  சூர்யா மற்றும் ஹரியின் கூட்டணியில் நான்காம் பாகம் வெளிவந்தால் நிச்சயமாக அது பட்டையை கிளப்பும் என்பதுதான் ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

 இந்நிலையில் சும்மா இருந்த சங்கை ஊதிவிட்டான் ஆண்டி என்ற பழமொழிக்கு ஏற்ப கம்முனு இருந்த ரசிகர்களை தற்போது உசுப்பேத்தி விடக்கூடிய வகையில் இது இருப்பதால் விரைவில் இதற்கான அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …