வணங்கான் பட நிலைமை என்ன? விளக்கிய இயக்குனர் பாலா… இதற்கு என்ன சொல்கிறார் நடிகர் சூர்யா? வாங்க படிக்கலாம்…!!!

 சூரரைப் போற்று படத்தில் தற்போது சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் சூர்யாவின் 41 திரைப்படமாக வணங்கான் திரைப்படம் உள்ளது.

 இந்த திரைப்படத்தை மிகவும் சிறப்பான முறையில் இயக்கம் செய்து வருகிறார் இயக்குனர் பாலா இதனை அடுத்து இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை வைரலாக்கியது.

 இதன் பிறகு இந்த திரைப்படத்தைப் பற்றி எந்த ஒரு அப்டேட்டுகளும் இதுவரை வெளி வராத நிலையில் அந்த படம் பற்றிய பலவிதமான கேள்விகளை இணையத்திலேயே ரசிகர்கள் எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள்.

இதனை அடுத்து நடிகர் சூர்யாவுக்கும் இயக்குனர் பாலாவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் உண்டாகிவிட்ட நிலையில் வனங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பை இவர் பாதியிலேயே நிறுத்திச் சென்று விட்டார் என்று சில செய்திகள் வெளிவந்தது.

 இதனை அடுத்து பேச்சுவார்த்தையின் மூலம் சமாதானமாகி இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை தற்போது நடத்தி வருகிறார்களாம்.

மேலும்அண்மையில் இயக்குனர் பாலா ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டதற்கு மழுப்பல் ஆன ஒரு சிரிப்புடன் பாலா வந்துட்டு இருக்கு என்று நக்கலாக பதில் அளித்து இருக்கிறார்.

 மேலும் உங்களுக்கும் சூர்யாவுக்கும் பிரச்சனையா என்று கேட்டதற்கும் சிரித்துக்கொண்டே எது நமக்கு பிரச்சனையா என பத்திரிக்கையாளர்களை நக்கல் அடித்தார். இதன் மூலம் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே பெரிய விரிசல் உண்டாகியுள்ளது உறுதியாகியுள்ளது.

 தற்போது சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வரும் வரலாற்று திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் சுதா கொங்குரா இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

 இந்நிலையில் பாலா இயக்கம்  வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு சூர்யா செல்லாமல் இருப்பதாக செய்திகள் தற்போது வெளிவந்துள்ளது. அதனை அடுத்து வணங்கான் திரைப்படத்தின் அப்டேட்டுகளுக்கும் ரிலீசிக்கும் தற்போது வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

 மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற பாலா இந்த படத்தை இயக்கி ஆறுதல் தேட இருந்த நிலையில் அவருக்கு இது மிகப்பெரிய அடியாக உள்ளது.எனினும் எப்போதுமே இயக்குனர் பாலா தன் கெத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …