நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்… மனசுக்கு பிடித்த மாதிரி தான் வாழ்வேன்- நடிகை சுருதிஹாசன்…!!

 எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நடிகர்கள் இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் என் மனதுக்கு பிடித்தபடி தான் நான் வாழ்வேன் என்று உலகநாயகன் மகளாகிய சுருதிஹாசன் அறிவித்திருப்பது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 இவர் தமிழ், தெலுங்கு போன்ற படங்களில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்திருக்கிறார். தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா உடன் இணைந்து வீர சிம்கா ரெட்டி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிரஞ்சீவியோடு இணைந்து வால்டேர் வீரையா  படத்திலும்  நடித்திருக்கிறார்.

மேலும் பிரபாஸோடு ஜோடியாக நடிக்கும் சால படிப்பிடிப்பும் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சுருதிஹாசன் அளித்துள்ள ஒரு பேட்டியில் சினிமாவில் எத்தனை உடைகளை வேண்டுமானாலும் மாற்றலாம் அல்லது விதவிதமான உடைகளை அணியலாம். இது போலவே கதாபாத்திரங்கள் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என்று கூறினார்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் மனதுக்கு பிடித்தது போல் தான் நான் வாழ்வேன். வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான விஷயம் அடுத்தவரை பிடித்தது போல வாழ்வதுதான். எனவே எனக்கு பிடித்த வண்ணமே நான் வாழ்வேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

 அது மட்டுமல்லாமல் அடுத்தவர்களுக்கு பிடித்தது போல உடை அணிவது பேசுவது நடந்து கொள்வது இவையெல்லாம் மிகவும் கஷ்டமானது. ஏனென்றால் நம்மை அவர்கள் எப்படி பார்க்கிறார்களோ அதுபடி தான் இருக்கும். எனவே அந்த நிலை அடிக்கடி மாறும் என்பதால் அது மிகவும் ஆபத்தானது என்பதை கூறி இருக்கிறார்.

 இது மட்டுமல்லாமல் நாம் அனைவரையும் திருப்தி படுத்த வேண்டும் என்று நினைக்காமல் நம் மனதிற்கு எது சந்தோஷத்தை தருகிறதோ அதுபடி நடந்து கொள்வது தான் முக்கியம் என்றும் அது போலவே தான் வாழ நினைப்பதாகவும் கூறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 இதனை அடுத்து இந்த கருத்துக்கு யாரும் அதிக அளவு கமாண்டுகளை தெரிவிக்க கூடாது. அப்படி தெரிவித்தாலும் அதை ஒரு பொருட்டாக இவர் எடுத்துக் கொள்ள மாட்டார். என்பதை அவர் ஏற்கனவே சுட்டிக்காட்டி விட்டார் எனவே வாழ்க்கை நம் வாழத்தான் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …