சூரியாவை மதிக்காத ஜோதிகா..! சூரியா கார்த்தி மோதல் காரணம் என்ன..? புட்டு புட்டு வைக்கும் பிரபலம்..!

தமிழ் சினிமாவில் விஜய் அஜித் வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில் மூன்றாவது நடிகராக ஒரு போட்டி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் சூர்யா.

நடிகர் விஜய், அஜித் போன்ற நடிகர்கள் இயக்குனர் விக்ரமன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு போட்டி நடிக்கராக சூர்யா இருந்து வந்தார். ஆனால் காலங்கள் செல்ல செல்ல பிறகு ஆக்ஷன் நடிகர்களாக மாறிய பிறகு விஜய்க்கும் அஜித்துக்கும் கிடைத்த வரவேற்பு சூர்யாவிற்கு கிடைக்கவில்லை.

ஆனால் கதை தேர்ந்தெடுப்பதை பொருத்தவரை விஜய் அஜித்தை விடவும் சூர்யா தேர்ந்தெடுக்கும் கதைகள் வித்தியாசமானதாக இருக்கின்றன. சூர்யா நடித்த பிதாமகன், பேரழகன் மாதிரியான கதை அமைப்புகள் கொண்ட எந்த கதைகளையும் விஜய்யையும் அஜித்தும் தொடவில்லை.

சூர்யாவிற்கு குறைந்த வரவேற்பு:

இருந்தாலும் கூட சூர்யாவிற்கான வரவேற்பு குறைவாகவே இருந்து வருகிறது. இருந்தாலும் தமிழில் டாப் 10 நடிகர்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் சூர்யா முக்கியமானவராக இருப்பார். சமீபத்தில் சூர்யாவின் மனைவியான ஜோதிகா மும்பையில் வீடு வாங்கிக் கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் என்று பேச்சுக்கள் இருந்தன.

சிவகுமாருடன் ஏற்பட்ட சண்டைதான் இதற்கு காரணம் என்று ஒரு பக்கம் கூறப்பட்டது. இந்த நிலையில் இதுவரை பத்திரிகையாளர் சுபேயர் ஒரு பேட்டியில் சில விளக்கங்களை கொடுத்திருந்தார். அதில் அவர் கூறும் பொழுது  சூர்யா ஜோதிகாவை திருமணம் செய்து கொள்வதில் ஆரம்பத்தில் இருந்தே சிவகுமாருக்கு உடன்பாடு இருந்தது கிடையாது.

ஜோதிகா சினிமாவில் நடிக்க கூடாது என்கிற நிபந்தனையுடன்தான் சிவகுமார் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் இவ்வளவு நாள் நடித்துக் கொண்டிருந்த ஜோதிகா தொடர்ந்து நடிக்காமலே எப்படி இருப்பார் அவரது குழந்தைகள் எல்லாம் வளர்ந்த பிறகு மீண்டும் அவர் திரைத்துறைக்கு வந்தார்.

குடும்ப பிரச்சனை:

அது அவர்களது சொந்தக்காரர்களுக்குள்ளேயே நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்துதான் பிறகு சூர்யாவின் குடும்பம் தற்சமயம் தனியாக மும்பையில் சென்று வசித்து வருகிறது என்று கூறுகிறார் சுபேயர்.

மேலும் அவர் கூறும் பொழுது சூர்யாவிற்கு போட்டி நடிகராகவே கார்த்தி தற்சமயம் வந்துவிட்டார். இருந்தாலும் அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர். கங்குவாவின் அடுத்த பாகத்தில் கார்த்தி இருப்பார் என்று கூறப்படுகிறது.

அதேப்போல விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகத்திலும் சூர்யா வில்லனாகவும் கார்த்தி கதாநாயகனாகவும் இருப்பதை பார்க்க முடியும் இருவரும் போட்டி நடிகர்களாக ஆனாலும் கூட அவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பது என்பது அந்த திரைப்படங்களுக்கு நல்ல வெகுமதியை பெற்றுக் கொடுக்கும் மக்கள் மத்தியிலும் நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கி கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …