சூர்யாவின்படத்தைப் பார்த்து அழுதேன்- முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து முடிந்து தேர்தலும் நடந்து முடிந்த நிலையில், அங்கே பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள்   தனியார் youtube சேனல் ஒன்றுக்கு   பிரத்தியேக பேட்டி ஒன்றை அடித்துள்ளார்.

 அந்த பேட்டியில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள்  உங்களுக்கு மிகவும் கலங்கி போன தருணம் எது என நெறியாளர் கேட்ட கேள்விக்கு அவர் ஒரு சுவாரசியமான பதிலை அளித்துள்ளார்.

அந்த தனியார் தொலைக்காட்சி சார்பாக முதலமைச்சர் அவர்களை பேட்டி எடுத்தது விஜய் டிவி நீயா நானா புகழ் கோபிநாத் அவர்கள். கோபிநாத்  அவர்கள் பல வருடங்களுக்கு முன்பாக இதே போல முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தந்தையான முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி அவர்களை பேட்டி எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில்  சென்னையில் அடையாறு பகுதியில் உள்ள டியோசோபிக்கள் சொசைட்டி சாலையில் நடை பயிற்சி மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுடன் கோபிநாத் அவர்கள் பல கேள்விகளை கேட்டு அதை மிக நோட்ஸ் தனியார் நிறுவனம் தனது youtube சேனலை வெளியிட்டுள்ளது.

அதில்  ஸ்டாலின் அவர்கள் நான் முதலமைச்சரான பின்பு பார்த்த சூர்யாவின் ஜெய் பீம் படத்தை பார்த்து மிகவும் கலங்கிப் போனேன் ஏனென்றால் அதேபோன்று துன்பத்தை நான்  மிசா சட்டத்தின் போது  அனுபவித்தேன் என்று கூறியிருந்தார்.

அந்த காணொளி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது.

 

இதுபோல சுவாரசியமான பல அரசியல் தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …