சூர்யாவோடு இணைந்து கைகோர்க்க உள்ள ரன்வீர் சிங்… வேள்பாரி படத்தை இயக்கும் ஷங்கர் தகவல்…!

தமிழ் திரை உலகில் தொடர்ந்து வரலாற்று படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்ற வேளையில் அடுத்ததாக வேள்பாரி என்ற வரலாற்று படத்தை  நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வந்திருக்கிறது.

 தற்போது இயக்குனர் ஷங்கர் உலகநாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன் இரண்டாவது படத்தை படு பிஸியாக இயக்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் ராம்சரணை வைத்து இன்னொரு படத்தையும் இவர் இயக்கி வருகிறார்.

 இந்த இரண்டு படத்தின் பணிகளும் முடிந்து விட்டால் அடுத்த கட்டமாக வேள்பாரி என்ற நாவலை அவர் படமாக இயக்க போவதாக பல செய்திகள் வந்திருக்கிறது.

 இதனை அடுத்து தற்போது இந்தப் படம் குறித்து ஒரு புதிய தகவலை வெளியிட்டு இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.இவர் தற்போது ராம் சரணை வைத்து சங்கர் இயக்கி வரக்கூடிய தெலுங்கு படத்திற்கு கதையை எழுதியவர்.

 இதனை அடுத்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கார்த்திக் சுப்புராஜ் கூறும் போது இயக்குனர் சங்கர் வேர் பாரி என்ற நாவலை படமாக்க உள்ளார். இது குறித்த முன் தயாரிப்பு பணிகள் அனைத்தும் தற்போது மிக விரைவாக நடைபெற்று வருவதால் இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.

 மேலும் ஏற்கனவே இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டு வரும் வேளையில் யார் அந்த புது நடிகர் என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் பாலிவுட் ஹீரோவான ரன்வீர் சிங் தான் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற ஒரு தகவலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

 மேலும் இதற்கு முன்னதாக சங்கர் ஹிந்தியில் அந்நியன் படத்தை இயக்கப் போவதாக அறிவித்ததோடு ரன்வீர் சிங் தான் அந்த படத்தில் நடிப்பார் என்று போது தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த படம் கைவிடபட்டது.

எனவே கட்டாயமாக ரன்வீர் சிங்கை இந்த வேள்பாரி படத்தில் இயக்குனர் ஷங்கர் நடிக்க வைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …