பிரபல சீரியல் நடிகை ஸ்யமந்தா கிரண் ( Syamantha Kiran ). தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் நடித்துள்ள இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.சென்னையை பூர்வீகமாக கொண்ட இவருக்கு இப்போது 35 வயது ஆகின்றது.
வளசர வாக்கத்தில் வசித்து வரும் எத்திராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார்.படிப்பு தவிர, நடனம் ஆடுவது மற்றும் பாடல்கள் பாடுவதை பொழுது போக்காக கொண்டுள்ளார்.
மேலும், விளம்பர படங்களிலும் நடித்து வரும் இவர் மற்ற நடிகைகளை போலவே மாடர்னான உடைகளை மிகவும் விரும்புபவர் ஆவார்.
கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஷியாமந்தா கிரண். மாடலிங் துறையிலும் கலக்கிக்கொண்டிருந்தவர்.
சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் நடிகர்கள் அடிக்கடி மாற்றப்படுவது சகஜமாக நடக்கும் ஒன்று தான். அவருக்கு பதில் இவர் என ஒரு வரியை மட்டும் போட்டுவிட்டு சீரியலை தொடர்வார்கள்.
நாளடைவில் ரசிகர்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள்.அதனால் தான் தமிழ் சின்னத்திரையில் அடிக்கடி இதுபோன்று நடப்பதை பார்க்க முடிகிறது.
அந்த வரிசையில் தற்போது சன் டிவியின் நிலா சீரியலில் அஞ்சலி என்ற ரோலில் நடித்து வந்த சியமந்தா கிரண் அதில் இருந்து திடீரென விலகி இருக்கிறார்.
அவ்வபோது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் இவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், மார்கழி மாசத்துல என்னமா ரியாக்ஷன் இது..? என்று கலாய்த்து வருகிறார்கள்.