டி ராஜேந்தர் ( T Rajendar ) சமீப காலமாக தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலக சினிமா நடிகைகளும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
இன்று இருக்கக்கூடிய சமூக வலைதளங்கள் அதற்கு மிகவும் துணையாக நிற்கின்றன. முன்பெல்லாம் ஒரு விஷயத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என்றால் பத்திரிகை வாசல்களில் காத்திருக்க வேண்டும் அல்லது தொலைக்காட்சி வாசல்களில் காத்திருக்க வேண்டும்.
ஆனால், தற்பொழுது யாருக்காகவும் காத்திருக்க தேவையில்லை. நமக்கு நடந்த அநீதியை வெளிப்படையாக சமூக ஊடகங்களில் பதிவு செய்தால் உரிய நியாயம் கிடைக்கிறது என்ற நம்பிக்கை ரசிகர் பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது.
ஏதேனும் ஒரு சிறு அநீதி நடந்தால் கூட இதனை எடுத்து சோசியல் மீடியாவில் போட்டு விடுங்கள் அப்போதுதான் தீர்வு கிடைக்கும் என்ற வகையில் சமூக வலைதளங்கள் என்று பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
T Rajendarஆனால், அந்த காலத்தில் அப்படி எல்லாம் கிடையாது. பிரபலங்கள் என்ற பெயரில் பல அத்துமீறல்களை நடத்தி இருக்கிறார்கள் சிலர். அந்த வகையில், படத்தின் தயாரிப்பாளர் உடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டு பட வாய்ப்பு பெற்ற நடிகையை நடிகர் டி ராஜேந்தர் தன்னுடைய படத்தில் இருந்து நீக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
தமிழ் திரைத்துறையில் நடிகர் இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒலி பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பல முகங்களை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் கொண்டிருக்கக்கூடிய ஒருவர் என்றால் அது நடிகர் டி ராஜேந்தர் என்று தான் கூற வேண்டும்.
T Rajendarமட்டுமில்லாமல் அவ்வப்போது அரசியல் சார்ந்த கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறார். தனியாக லட்சிய திமுக என்ற கட்சியையும் நிர்வகித்து வருகிறார். இவர் நடிக்கக்கூடிய படங்களில் ஆபாச காட்சிகள் என்ற பேச்சே இருக்காது. இன்னும் சொல்லப்போனால் தனக்கு ஜோடியாக நடிக்க கூடிய நடிகையை தொடாமலேயே படம் முழுக்க நடித்து அசத்துவார் டி ராஜேந்தர்.
இதற்காகவே இவருக்கான தனி ரசிகர் பட்டாளம் இன்றுவரை இருக்கிறது என்றால் அதற்கு காரணம் டி ராஜேந்திரன் தனிப்பட்ட குணம் தான் என்று தான் கூற வேண்டும்.
T Rajendarஇவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரயில் பயணங்களில். இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ஒரே திரையரங்கில் மூன்று வருடங்கள் ஓடிய வரலாறு எல்லாம் இருக்கிறது.
இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை ஜோதி நடித்திருப்பார். ஆனால், முதலில் ஹீரோயினாக நடித்தது வேறு ஒரு நடிகை. இந்த படத்தில் நடிப்பதற்காகவும்.. ஹீரோயின் வாய்ப்புக்காகவும் படத்தின் தயாரிப்பாளருடன் படுக்கையை பகிர்ந்து வாய்ப்பை பெற்றிருக்கிறார் அந்த நடிகை.
T Rajendarஇந்த விபரம் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் தனக்கு தெரிய வர கடுப்பான டி ராஜேந்தர் தயாரிப்பாளர் மற்றும் ஹீரோயினை மாற்றி விட்டு புது தயாரிப்பாளர் மற்றும் புது ஹீரோயினை வைத்து மீண்டும் படத்தை துவங்கி இருக்கிறார். அந்த படத்தை எடுத்து பிளாக்பஸ்டர் வெற்றி படமாகவும் மாற்றிக் காட்டி இருக்கிறார் டி ராஜேந்தர்.
இப்படி பட வாய்ப்புக்காக படுக்கையை பகிறச் சொல்லும் தயாரிப்பாளர்கள் தவறு என்றால்..? அதற்கு உடந்தையாக இருக்கும் நடிகைகள் செய்வதும் தவறுதான் என்பதை உலகுக்கு சொல்லும் விதமாக டி ராஜேந்தர் இந்த சம்பவத்தை செய்துள்ளார்.