காசு குடுத்தா எதை வேணாலும் செய்வீங்களா..? – நடிகை தமன்னாவை கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

காசுக்காக இப்படியுமா..? என்று நடிகை தமன்னாவை விளாசி வருகிறார்கள் ரசிகர்கள். காரணம் மலையாள நடிகர் திலீப் படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை தமன்னா சம்மதம் தெரிவித்து இருப்பது தான்.

அசுரன் படத்தில் நடித்த நடிகை மஞ்சுவாரியர் முன்னாள் கணவர் நடிகர் திலீப் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரச்சனை இதுவல்ல. உண்மையான பிரச்சனை என்னவென்றால் பிரபல நடிகை பாவனா சினிமாவில் உச்சத்தில் இருந்த பொழுது பிரபல மலையாள நடிகர் ஒருவரின் தவறான அணுகுமுறைக்கு உள்ளாகி உடல் அளவிலும் மனதளவிலும் கடுமையான தொந்தரவுக்கு ஆளானார்.

அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது. நடிகை பாவனாவிற்கு அந்த சம்பவம் நடந்ததற்கான முழுமுதல் காரணம் வேறு யாருமல்ல நடிகர் திலீப் தான். அவர் ஹீரோவாக நடிக்க இருக்கவுள்ள புதிய படத்தில் தான் நடிகை தமன்னா ஹீரோயினாக தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

சக நடிகை ஒருவரை தவறான அணுகுமுறைக்கு உள்ளாக்கிய நடிகரின் படத்தில் நடிக்க நடிகை தமன்னா எப்படி எடுத்துக் கொண்டார் என்று ரசிகர்கள் பலரும் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்வீர்களா..? குறைந்தபட்சம் தொழில் பத்தி வேண்டாமா..? சக பெண்களின் மீது உங்களுக்கு அக்கறை இருக்க வேண்டாமா..? சக நடிகை ஒருவரை ஆட்களை வைத்து துஸ்பிரயோகம் செய்த ஒரு நடிகரின் படத்தில் நீங்கள் எப்படி நடிக்க ஒப்புக் கொண்டீர்கள்.

நடிகை தமன்னா உங்கள் மீது எங்களுக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது.. நீங்கள் இந்த படத்தில் நடிப்பதில் இருந்து விலகவேண்டும்… என்று ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர் இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …