நானும் பெண் தான்.. எனக்கும் அந்த ஆசை இருக்கு… – வெளிப்படையாக பேசிய நடிகை தமன்னா..!

நடிகை தமன்னா சமீபத்தில் ஒரு பேட்டியில் எல்லாப் பெற்றோர்களின் போல என்னுடைய பெற்றோர்களும் என்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தி வருகிறார்கள் என்று கூறி இருந்தார். தமன்னாவின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை தமன்னா குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிஸியான நடிகையாக வலம் வந்தார்.

சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் நடிகை சமந்தா கவர்ச்சி ஆட்டம் போட்டது போல புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை தமன்னா கவர்ச்சி ஆட்டம் போட ஒப்பந்தமாகியிருக்கிறார் இதற்காக இவருக்கு கோடிகளில் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை தமன்னா திருமணம் குறித்து சில விஷயங்களை பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, எல்லா பெற்றோர்களையும் போல என்னுடைய பெற்றோர்களும் என்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

நானும் பெண் தான்.. எனக்கு திருமணம் செய்ய வேண்டும்.. முக்கியமா.. குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.. என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கு இப்போது இதுதான் சரியான நேரம் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. காரணம் என்னுடைய தொழில்.

என்னுடைய தொழில் காரணமாக என்னுடைய சொந்த வாழ்க்கையை கூட பார்த்துக்கொள்ள.. கவனித்துக்கொள்ள.. நேரம் ஒதுக்க முடியாத நிலையில் நான் இருக்கிறேன். அப்படி இருக்கும்பொழுது திருமணம் செய்து கொண்டு என்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை நினைக்கும்போது எனக்கு பயமாக இருக்கிறது.

நான் தற்போது பிசியாக நடித்து வருகிறேன். என்னுடைய பெற்றோரிடம் கூட எனக்கு பேசுவதற்கு நேரம் கிடையாது. என் கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருக்கிறது. என்னை இந்த அளவுக்கு வளர்த்து விட்ட சினிமாவை அப்படியே விட்டுவிட்டு என்னால் வர முடியவில்லை.

படப்பிடிப்பு தளங்களில் நான் இருக்கும் போதுதான் ஒரு மகிழ்ச்சி எனக்கு இருக்கிறது. ஆரம்ப காலங்களில் நாங்கள் மிகவும் ஏழ்மையாக இருந்தபொழுது நாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் எல்லாம் எங்களுக்கு தெரியும்.

அந்த பிரச்சினையை எல்லாமே முடித்து வைத்தது இந்த சினிமாதான். எனவே இந்த சினிமாவை விட்டு என்னால் எளிமையாக வெளியே வரமுடியாது. சினிமாதான் என்னுடைய சந்தோஷம். ரசிகர்கள்தான் என்னுடைய சந்தோஷம்.

என்னுடைய வாழ்க்கையை தரம் உயர்த்திய இந்த சினிமாவை நான் எப்போதும் மறக்கமாட்டேன். கூடுமானவரை இந்த சினிமாவிற்கு என்னால் எவ்வளவு பங்களிப்பு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுப்பேன்.

நிச்சயமாக பணத்திற்காக நான் தற்பொழுது நடிக்கவில்லை. பணம் என்பதை தாண்டி சந்தோஷம் எனக்கு இந்த துறையில் கிடைக்கிறது. சினிமாவில் என்னுடைய பங்கும் இருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.

ரசிகர்களின் இந்த அன்பு மற்றும் ஆதரவை நான் எப்போதும் மறக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். எனக்கு திருமணம் செய்து கொள்ள இதுதான் சரியான நேரம் என்று எனக்கு தோன்றும் பொழுதே நிச்சயமாக திருமணம் செய்து கொள்வேன் என்று பதிலளித்திருக்கிறார் நடிகை தமன்னா.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …