தெலுங்கு திரைப்பட விழாவில் கவர்ச்சியான உடையில் கலந்து கொண்ட நடிகர் தமன்னாவிடம் பிரபல நடிகர் தன்னோடு டேட்டிங் வருவ அழைத்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடநாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் நடிகை தமன்னா பாப்புலர் ஆனது என்னவோ தென்னிந்தியாவில் தான். இவர் தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.
இதனை அடுத்து இவருக்கு கல்லூரி என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தில் இவர் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் காரணமாக அடுத்தடுத்து முன்னணி நடிகர்களோடு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
சினிமாவில் வாய்ப்பு வருவது குறைய தொடங்கிய உடனே இவர் கிளாமரை கையில் எடுத்துக்கொண்டு பல புதிய திரைப்படங்களில் நடிக்க எதிர்பார்த்து காத்திருக்கிறார்.மேலும் இவர் விஜய் அஜித் சூர்யா தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தவர்.
தற்போது இவருக்கு தமிழில் அதிக வாய்ப்பு இல்லாத காரணத்தால் தெலுங்கு உலகில் இவர் தஞ்சம் அடைந்து விட்டார் என்று கூறலாம்.
இவர் நடிப்பில் உருவாகி இருக்கக்கூடிய குர்டுண்டா சீதகளம் என்ற திரைப்படத்தில் தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சத்யதேவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படம் வரும் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனை அடுத்து படத்திற்கான பிரமோஷன் வேலைகள் படு வேகமாக நடந்து வருகிறது. மேலும் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சிகள் பிரபல தெலுங்கு நடிகர் ஆத்வி சேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் வெறும் கோர்ட் மட்டும் அணிந்து வந்து தொடை முழுவதும் தெரியக்கூடிய கவர்ச்சி உடையில் நடிகை தமன்னா கலந்து கொண்டார்.
அந்த சமயத்தில் இவரிடம் தொகுப்பாளர் ப்ரபோஸ் செய்யுமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து நடிகர் ஆத்வி தன்னோடு டேட்டிங் வருமாறு கேட்டதை அடுத்து அதிர்ச்சி அடைந்த தமன்னா சிரித்தே மழுப்பி விட்டார் என கூறலாம்.