2 நடிகைகளுடன் திருமணம்.. KR விஜயா மருமகன்.. ரஞ்சித் பற்றி பலரும் அறிந்திடாத தகவல்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்க கூடிய நடிகர் ரஞ்சித் தமிழில் சிந்துநதிப் பூ என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து தமிழில் பல படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் பல படங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பெயர் பெற்றார்.

நடிகர் ரஞ்சித்..

1993-ஆம் ஆண்டு வெளி வந்த பொன்விலங்கு படத்தை கே எஸ் ராஜ்குமார் இயக்கியிருந்தார். அந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார். இந்தப் படமானது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்தது.

மேலும் இந்த படத்தில் ரஞ்சித்தின் நடிப்பு சொல்லிக் கொள்ளும் படி இருந்ததாக பலரும் பாராட்டுதல்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் சில படங்களில் வில்லன் கேரக்டர்களையும் செய்திருக்க கூடிய இவர் சேரன் சோழன் பாண்டியன் போன்ற படங்களில் தனது அற்புதம் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அது மட்டும் அல்லாமல் 1999-இல் நேசம் புதுசு என்ற படத்தில் இவரோடு இணைந்து நடித்த பிரியா ராமனை திருமணம் செய்து கொண்டார்.

இரண்டு நடிகைகளுடன் திருமணம்..

இதனை அடுத்து நடிகர் ரஞ்சித்துக்கு பிரியா ராமனோடு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்று இந்த காதல் தம்பதிகளுக்கு  இரண்டு குழந்தைகள் உள்ளது.

விவாகரத்து பெற்ற அதே கையோடு 2014 -ஆம் ஆண்டு ராகசுதா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த சமயத்தில் நடிகர் ரஞ்சித் மற்றும் பிரியா ராமனின் விவாகரத்துக்கு காரணமே இவர் தான் என்று அதிகளவு தகவல்கள் பரவியது. எனினும் இதில் எது உண்மை என்பது என்று வரை தெரியவில்லை.

 கே ஆர் விஜயா மருமகன்..

இந்த இரண்டாவது திருமணமும் நீண்ட நாள் நீடித்து நிற்கவில்லை 2015-இல் திருமணம் நடந்தது. ஒரே வருடம் மட்டும் தாக்குப் பிடித்து இருந்த  ரஞ்சித் 2015 – ஆம் ஆண்டு மீண்டும் விவாகரத்து செய்து விட்டார் கொண்டார்கள்.

இதனை அடுத்து மீண்டும் மூன்று வருட இடைவெளியில் 2018 – இல் பிரியா ராமனை மீண்டும் திருமணம் செய்து கொண்டார் ரஞ்சித்.

ரஞ்சித் பற்றி அறியாத தகவல்கள்..

நடிகர் ரஞ்சித் இது வரை நடிப்பு, சினிமா என்று இருந்ததை தாண்டி தற்போது ஒரு அரசியல்வாதியாகவும் களம் இறங்கி இருப்பது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இரண்டாவது மனைவி ராகசுதாவும் ஒரு நடிகை என்பது பலருக்கும் தெரியாது. இவர் பல மலையாள படங்கள் மற்றும் தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய நடிகையாக இருக்கிறார்.

மேலும் ராகசுதா புன்னகை அரசி கே ஆர் விஜயாவின் நெருங்கிய உறவினர் என்பது பலருக்கும் தெரியாது. 

அத்தோடு சின்னத்திரையில் செம்பருத்தி சீரியலின் மூலம் தொடர்களில் நடித்த பிரியா ராமனின் உண்மை கதை வெளியே தெரிய ஆரம்பித்தது. 

இதனை அடுத்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி நடிகர் ரஞ்சித் இருமுறை திருமணம் செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல் முன்னதாக திருமணம் செய்த முதல் மனைவியே மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறாரா என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் youtube வீடியோவை நீங்கள் காண விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்தால் போதுமானது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …