“தல தப்புமா..?..” – தலைவலியில் தளபதி நடிகர்..! பீதியில் படக்குழுவினர்..!

தளபதி நடிகர் நடிப்பில் உருவாகியிருக்கும் கூடிய திரைப்படம் அக்கட தேசத்தில் மொழியிலும் தமிழ் மொழியிலும் என ஒரே சமயத்தில் இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கிறது. கிட்டத்தட்ட தளபதி நடிகரின் முதல் நேரடி தெலுங்கு திரைப்படம் இது என்று கூறலாம்.

பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வரும் இந்த திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் குவிந்து இருக்கின்றன. பொதுவாக தளபதி நடிகரின் படம் வெளியாகிறது என்றாலே தமிழ் நாடே திருவிழாக் கோலமாக இருக்கும்.

தற்போது தல நடிகரின் புகைப்படமும் வெளியாகி இருப்பது. இரண்டு திருவிழா என்று ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த இரண்டு திருவிழாவும் தமிழர்களின் திருவிழாவான பொங்கல் என்ற திருவிழாவுடன் சேர்ந்து தமிழ் நாடே விழாக்கோலம் பூண்டு இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

தல தப்புமா..?

இந்நிலையில், தளபதி நடிகர்… தல தப்புமா என்ற தலைவலியில் இருப்பதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் முணுமுணுத்து வருகின்றது. இந்தப் படத்தை வெளியிடுவதற்கு ஏற்படும் சர்ச்சைகளால் தான் தளபதி நடிகர் தலைவலியில் இருக்கிறாரோ..? என்று கேட்ட போது இதற்கும் அதிகமான தலைவலி எல்லாம் அவர் சந்தித்து விட்டார். ஆனால் அவருடைய தற்போதைய தலைவலிக்கு முக்கியமான காரணம் வேறு என்று கூறுகிறார்கள்.

டப்பிங் படம்…!

இதற்கு என்ன காரணம் என்று விசாரித்த பொழுது தான் விவரம் என்ன என்று தெரியவந்தது. என்ன காரணம் என்றால், இந்த திரைப்படம் பார்ப்பதற்கு டிட்டோ தெலுங்கு படம் போலவே இருப்பதாகவும், டப்பிங் செய்யப்பட்ட தெலுங்கு படம் போல தான் தமிழ் பதிப்பும் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

இதனால்தான் தளபதி நடிகர் மிகுந்த தலைவலியில் இருப்பதாக கூறப்படுகிறது. இவருடைய எத்தனையோ படங்கள் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெறுகின்றன. சில திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்து இருக்கின்றன.

ஆனால், படுதோல்வி அடைந்த படங்களில் கூட இது தமிழ் படம் தான் என்ற ஒரு துணை இருக்கும். ஆனால் இந்த படம் ஏதோ தெலுங்கு படம் போல இருப்பதால் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறாராம் தளபதி நடிகர். அந்த அளவுக்கு தெலுங்கு வாசனை இந்தப்படத்தில் வீசுகிறதாம்.

இந்த படம் வெளியாகி முதல் மூன்று நாட்களில் வசூலை அள்ளி விட வேண்டும் என்ற நிலையில் படக்குழு முனைப்பு காட்டி வருகிறது. அதே நாளில் தல நடிகரின் படமும் வெளியாவதால் திரையரங்குகள் பிடிப்பதிலும் மிகப்பெரிய தலைவலியை படக்குழு சந்தித்து வருகிறது.

கிட்டத்தட்ட பாதி திரையரங்குகளை பிடித்து விட்டால்கூட 500 திரையரங்குகளை தாண்ட முடியாது. அப்படி இருக்கும் பொழுது போட்ட காசை எடுக்க முடியுமா..? என்ற பீதியில் இருக்கிறாராம் தயாரிப்பாளர். இதனால், வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி சர்ச்சையை கிளப்பி வருகிறாராம்.

எல்லாமே தெலுங்கு.. அப்புறம் எப்படி தமிழ் படம் வரும்..

தெலுங்கு இயக்குனர்.. தெலுங்கு தயாரிப்பாளர்.. தெலுங்கு ஹீரோயின்.. படம் மட்டும் எப்படி தமிழ் படமாக வரும்.. விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும் என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் ஜோதிடர்கள். இப்படி எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும் தளபதி என்ற ஒரே ஒரு பெயருக்கு இந்த திரைப்படம் நிச்சயம் போட்ட காசை வசூலித்து விடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் தயாரிப்பாளர் என்று கூறுகிறார்கள்.

எந்த படமும் போட்டிக்கு இல்லாத பொழுது இந்த படம் வெளியானால் இந்த நம்பிக்கை மிகவும் சரியாக இருக்கும். ஆனால், போட்டிக்கு சமபலம் கொண்ட தல நடிகரின் படம் வெளியாகிறது.

ஏற்கனவே தல நடிகருடன் மோதிய சூப்பர் நடிகரின் படம் நன்றாக இருந்துமே தல நடிகரின் படத்தின் வசூலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது என்பது வரலாறு. தெலுங்கு வாசனையுடன் ஒரு படத்தை எடுத்து வைத்துக்கொண்டு தல நடிகரின் படத்தோடு மோத விடுவது சரியானதாக இருக்குமா..? என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

தலை கீழாகத்தான் குதிக்க போகிறேன்..

இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை இரண்டு வாரம் தள்ளி வைக்கலாம் என்று இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிட கூடிய பெரிய இடத்து நிறுவனம் ஒன்று யோசனை தெரிவித்து இருக்கிறது.

ஆனால், நான் தலை கீழாகத்தான் குதிப்பேன் என்றும்.. ரிலீஸ் செய்தால் பொங்கல் அன்று தான் ரிலீஸ் செய்வோம் என்றும் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனால் படத்தின் மீது சந்தேகம் வந்துவிடும் என்று அறிவியல் பூர்வமான ஒரு காரணத்தையும் முன் வைத்து படத்தை பொங்கல் பண்டிகை அன்று ரிலீஸ் செய்தாக வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டு இருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம்.

இன்னும்  20 நாட்களில் என்ன சமாச்சாரம் என்று தெரிந்து விடப்போகிறது.  பொறுத்திருந்து பார்ப்போம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …