கோடை வருகிறது என்றாலே குளிர்பானங்களின் பக்கம் நாம் திரும்பி விடுவது இயற்கை தான். இந்த குளிர்பானங்களின் வரிசையில் இயற்கை நமக்கு கொடுத்த பெரும் கொடை தான் இளநீர்.
இந்த இளநீரை குடிப்பதன் மூலம் நமக்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படுவதோடு உடல் வெப்பமடைவதும் பெருமளவு தடுக்கப்பட்டு உடலுக்கு தேவையான குளிர்ச்சியை இது கொடுக்க வல்லது.
அப்படிப்பட்ட இளநீரை நீங்கள் அப்படியே அருந்தாமல் இப்படி நீங்கள் செய்து அருந்துவதின் மூலம் உங்களுக்கு எண்ணற்ற பயன்கள் கிடைப்பதோடு வழுக்கையை தூக்கி எறியாமல் எளிதாக நீங்கள் அனைவரும் ஊட்டச்சத்தோடு உள்ள ஒரு பானத்தை பருகியது போல ஒரு பீல் உங்களுக்கு கிடைக்கும்.
இதற்குத் தேவையான பொருட்கள்
1.இளநீர்
2.இளநீருக்குள் இருக்கும் வழுக்கை தேங்காய்
செய்முறை
இளநீரை வெட்டி அந்த தண்ணீரை ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை அடுத்து நீங்கள் அந்த இளநீரை எடுத்த தேங்காயை வெட்டி அதில் இருக்கும் வழுக்கையை தோண்டி எடுத்துக் கொள்ளவும்.
இப்போது வழுக்கையை நீங்கள் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மைய அரைத்து விடுங்கள். இதனை அடுத்து எடுத்து வைத்திருக்கும் இளநீரை இதனால் ஊற்றி மீண்டும் ஒருமுறை நன்கு அரைத்து விடுங்கள்.
உங்களுக்கு குளிர்ச்சி தேவை என்றால் சில ஐஸ் துண்டுகளை இதனோடு போட்டு மீண்டும் ஒரு ஓட்டு போட்டு விடுங்கள். இப்போது எந்த கலவையை நீங்கள் ஒரு டம்ளரில் விட்டு குடிப்பதின் மூலம் உங்களுக்கு பசி ஏற்படாதபடி உங்கள் வயிறு மிக எளிதாக பில்லாகி விடுவதோடு நா வறட்சி மற்றும் நீர் தாகம் சில மணி நேரங்கள் அளவு உங்களுக்கு எடுக்காது.
மேலும் இதனை குடிப்பதன் மூலம் உங்கள் வயிற்றில் இருக்கும் புண், வாய் புண், மலச்சிக்கல் போன்றவை மிக எளிதில் சரியாகும்.
எந்த ட்ரிக்கை நீங்கள் ஃபாலோ செய்வதின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதை உறுதியாக நம்புங்கள்.