தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி வரும் பிரபல இசையமைப்பாளர் தமன் ( Thaman ) தயாரிப்பாளரிடம் 40 லட்சம் ரூபாய் குண்டான ஹோட்டல் பில்லை நீட்டி இருப்பது பெரும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் தமன். அதன் பிறகு நடிப்பது நிறுத்திவிட்டு இசையமைப்பாளராக தன்னுடைய முழு முழு நேர சினிமா பயணத்தை தொடங்கினார்.
தற்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் சில திரைப்படங்களில் இசையமைத்த நடிகர் தமன் அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் நுழைந்தார் தெலுங்கில் இவருக்கு ஏகபோகமான வரவேற்பு கிடைத்தது.
முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே அதற்கு இசை தமன் என்ற நிலை தான். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு என்ற திரைப்படத்தில் இசையமைத்திருந்தார்.
தெலுங்கு சினிமாவில் தமன் ராஜ்ஜியம் தான் என்று கூறலாம். இவர் இசையமைத்த படங்களின் தெலுங்கு படங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டு செல்கிறது. இந்நிலையில், இசையமைப்பாளர் தமனின் ஒரு தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அது என்னவென்றால் தமனுக்கு என சொந்தமாக மியூசிக் ஸ்டூடியோ எதுவும் இல்லையாம். எனவே பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள பார்க் ஹயாத் ஹோட்டலில் தான் ஒரு அறையை வாடகை எடுத்து அங்கு இசையமைத்து வருகிறாராம்.
அங்கு அவர் பெயரில் ஏராளமான அறைகள் புக் செய்யப்பட்டுள்ளதாம். அவர் புக் செய்த அறைகளுக்கு வாடகையை குறிப்பிட்ட பதத்தின் தயாரிப்பாளர்கள் தான் கட்டுவார்களாம்.
அந்த வகையில், சமீபத்தில் தனது ஹோட்டல் பில்லை தயாரிப்பாளருக்கு அனுப்பி இருக்கிறார் நடிகர் தமன். அவர் அனுப்பிய பில்லை பார்த்து ஷாக் ஆகி இருக்கிறார் தயாரிப்பாளர்.
ஏனென்றால் அவர் அனுப்பிய பில்லின் தொகை 40 லட்சம் ரூபாயாம். இதை பார்த்ததும் அவருக்கு ரூம் போட்டு கொடுத்தது ஒரு குத்தமா..? என புலம்பி தள்ளி வருகிறாராம் தயாரிப்பாளர். இது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாகி இருக்கிறது மட்டுமில்லாமல் அக்கட தேசத்து ஊடகங்களில் தமனின் பெயர் உருண்டு கொண்டிருகின்றது.