ஒரு நிமிஷம் நயன்தாரா-ன்னு நெனசிட்டோம்.! – தாமிரபரணி பானு-வை பார்த்து குழம்பிய ரசிகர்கள்..!

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாகவும் படத்தின் கதாநாயகியாகவும் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தாமிரபரணி பானு.

மலையாள நடிகை தாமிரபரணி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகனார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் அடுத்த நயன்தாரா இவர்தான் என்றெல்லாம் கூட யூகங்கள் பறந்தன.

அடுத்தடுத்து சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால் இந்த திரைப்படங்களில் இவருக்கு வெற்றி படங்களாக அமையவில்லை. காரணம் இவர் தேர்வு செய்த கதை என்றுதான் கூற வேண்டும்.

சினிமாவில் அறிமுகமான புதிதில் கவர்ச்சியான உடைகளை அணிய மாட்டேன் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று ஏகத்துக்கும் அடம் பிடித்து வந்தார் நடிகை தாமிரபரணி பானு.

இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. கிடைத்த படங்களில் நடித்து வந்த நடிகை பானுவிற்கு அந்த படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை இதனால் இவருடைய மார்க்கெட் எழவே இல்லை.

எனவே தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார் அம்மணி. இவருடைய உண்மையான பெயர் முக்தா என்பதாகும்.

ஆனால் ரசிகர்கள் பலரும் இவரை இன்னமும் தாமிரபரணி பானு என்று நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த திரைப்படம் வெற்றி படமாகவும் இவருக்கு ஒரு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த படமாகவும் இருந்தது.

மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்த இவர் அதன் பிறகு குறிப்பிடும்படி சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை அவரால் பெற முடியவில்லை.

தற்பொழுது திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயும் வாங்கி இருக்கிறார் அம்மணி. மட்டுமில்லாமல் அழகு கலை மற்றும் பரதநாட்டியம் ஆகியவற்றில் கைதேர்ந்தவராக இருக்கும் இவர் தனியாக அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார் மற்றும் பரதநாட்டிய வகுப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இப்படி தன்னுடைய தொழிலில் பிஸியாக இயங்கிக் கொண்டு குடும்பம் குழந்தைகள் என இருக்கும் நடிகை தாமிரபரணி பானு அவ்வப்போது இணைய பக்கங்களில் தன்னுடைய குழந்தையுடன் குதூகலமாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம்.

நிலையில் விசுவாசம் படத்தில் வரும் நடிகை நயன்தாரா போல கொண்டை போட்டு கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் ஒரு நிமிஷம் நயன்தாரா என்று நினைத்து விட்டோம் என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Thamirabarani Banu recently posted a series of photos on her social media accounts that caused some confusion among her fans. According to the reports, some of the fans thought that she was posing as South Indian actress Nayanthara in the pictures.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …