ஜன்னல் ஓரம்.. கின்னென குத்த வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! – கிளீன் போல்டான ரசிகர்கள்..!

தற்போது உள்ள திரை கதாநாயகிகளில் நன்றாக தமிழ் பேசத் தெரிந்த கதாநாயகியாக தமிழில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமே இவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் நடிகையாக தற்போது வரை நிறைய தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் தெலுங்கு மலையாளம் உட்பட பல திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக முதலில் தனியனது பணியை தொடங்க ஆரம்பித்தார் அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடித்து பல பட வாய்ப்புகளை தொடர்ந்து பெற்றார்.

2019ல் தனது முதல் திரைப்படமான நீ தானா அவன் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், 2012ல் ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய புகழை அடைந்தார் இந்த திரைப்படத்தில் அமுதா என்ற கதாபாத்திரம் மிகவும் பேசும் படி இருந்தது என்று அனைத்து சினிமா விமர்சனங்களும் தங்களது விமர்சனத்தில் கூறியிருந்தனர்.

2017ல் தாடி என்ற இந்தி திரைப்படத்தில் அர்ஜுன் ராம் பாலுடன் இணைந்து நடித்தார். ஐஸ்வர்யா அவர்களின் தந்தை ராஜேஷ் அவர்கள் தெலுங்கு திரைப்படங்களில் 50 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் இவருடைய தாத்தா அமர்நாத் ஒரு தெலுங்கு நடிகர் ஆவார் இவர் எத்திராஜ் கல்லூரியில் இளங்கலை பட்டதாரி ஆனார்.

2012இல் விளையாட வா அட்டகத்தி ஆச்சரியங்கள் என்ற படங்கள் மூலம் தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டு வந்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் 2013 ஆம் ஆண்டு புத்தகம் என்ற திரைப்படத்தில் தாரா என்ற கதாபாத்திரம் பல்வேறு விருதுகளை இவருக்கு பெற்று தந்தது.

அதன் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் ரம்மி பண்ணையாரும் பத்மினி என்ற திரைப்படங்கள் மூலம் தொடர்ச்சியாக விஜய் சேதுபதியுடன் நடிப்பதன் மூலம் விஜய் சேதுபதியுடன் கிசுகிசுக்கப்பட்டு பின்பு அதன் பிறகு அவருடன் நடிக்க மறுத்ததாக அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

பின்பு 2015 ஆம் ஆண்டு காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் நடித்து தேசிய விருதை பெற்றார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள். 2016 இல் ஆறாவது சினம் ஹலோ நான் பேய் பேசுறேன் மனிதன் தர்மதுரை போன்ற தொடர்ச்சியான திரைப்படங்கள் மூலம் தன்னை தனித்தன்மையான கதாநாயகியாக தமிழ் திரை உலகிலும் தெலுங்கு துறை உலகிலும் நிலை நிறுத்திக் கொண்டார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இல்லை என்றாலும் அவ்வப்போது சில புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் அதில் தற்போது அவர் பகிர்ந்து உள்ள சில புகைப்படங்கள் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருப்பதால் instagram ரசிகர்கள் அவரது பக்கத்தில் பல சுவாரஸ்யமான கமெண்ட்களை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …