சூரியாவுக்கு திமிரு அதிகமாகிடுச்சு.. ரொம்ப கேவலம் இது.. விளாசும் பிரபலம்..!

தமிழ் திரை படத்தில் தற்போது தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் நடிகர் சூரியா வாரிசு நடிகராக திகழ்கிறார். இவரது தந்தை பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சிவகுமார் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

இதனை அடுத்து நடிகர் சூரியா நேருக்கு நேர் படத்தில் நடித்ததை அடுத்து பல வாய்ப்புகள் அவருக்கு கிடைத்திருந்தாலும் ஆரம்பத்தில் நடித்த படங்கள் சொல்லிக் கொள்ளும் படி ஓடி மக்கள் மத்தியில் சரியாக ரீச் ஆகவில்லை.

சூரியாவுக்கு திமிரு அதிகமாயிடுச்சு..

இதனை அடுத்து இயக்குனர் பாலாவால் பிதாமகன் திரைப்படத்தின் மூலம் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி மக்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவருக்கு நந்தா திரைப்படம் திருப்பு முனையாக அமைந்தது.

இந்நிலையில் திரைத்துறையில் தன்னை தூக்கி விட்ட இயக்குனர் பாலாவின் படத்தில் இருந்து நடிக்காமல் விலகி இப்போது தேசிய அளவில் பெயர் பெற்றுக் கொடுத்த இயக்குனர் சுதா கோங்குராவின் படத்திலும் பல்டி அடித்து இருக்கக்கூடிய சூரியா பற்றி சில விஷயங்கள் கசிந்துள்ளது.

இந்த வகையில் இவர் வணங்கான், புறநானூறு போன்ற படங்களில் இருந்து விலக காரணம் என்ன? இவர் ஏன் விலகினார் என்பது போன்ற கருத்துக்களை அதிரடியாக பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் வலை பேச்சு பிஸ்மி.

அண்மையில் ஆகாயம் சேனலில் அளித்த பேட்டி ஒன்றில் சூரியாவிற்கு திமிரு அதிகமாயிடுத்து சினிமா என்பது செருப்பு மாதிரி என்பது போன்ற கருத்துக்களை வலியுறுத்தக் கூடிய வகையில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

இது ரொம்ப கேவலம்..

மேலும் இயக்குனர்கள் ஒரு நடிகரிடம் கதை சொல்லும் போது ஒருவர் வரி அல்லது சில வார்த்தைகளில் இது தான் கதை என்று சொல்லிவிடுவார்கள்.

அந்த வகையில் நடிகர் சூரியாவிடம் புறநானூறு மற்றும் வணங்கான் திரைப்படத்தின் கதைகளை சொல்லிய சமயத்தில் அவர் அதை ஓகே சொன்னதை அடுத்து அவர் எதிர்பார்த்த கதை நடிக்கும் போது இல்லாத காரணத்தால் அந்த திரைப்படங்களில் இருந்து விலகி இருக்கலாம்.

மேலும் முழு கதையும் தெரிந்த பிறகு தான் நடிப்பேன் என்று சொல்லுவது ஆரோக்கியமான வளர்ச்சி அந்த நிலையில் இருக்கக்கூடிய சூரியாவிடம் நான் வளர்த்து விட்ட சூரியாவிடம் முழு கதையும் சொல்ல வேண்டுமா?

ஏன் அதை சூட்டிங் சமூகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாமே என்ற கண்ணோட்டத்தோடு இயக்குனர் பாலா இருந்திருக்கலாம்.

எனவேதான் வணங்கால் மற்றும் புறநானூறு படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகி இருக்க வேண்டும் மேலும் அன்னைக்காலமாக அவரோடு இருக்கக்கூடிய சிலர் அவரது ஆட்டிட்யூட் பற்றி சொல்லி இருக்கிறார்கள்.

விளாசம் பிரபலம்..

அந்த வகையில் சூரியாவிற்கு தற்போது திமிரும் தலைகீனமும் அதிகம் ஆகிவிட்டது என்று சொல்லலாம். இதற்கு காரணம் அவர் தன்னை ஓர் தளபதி விஜய் ஆகவும் தல அஜித்தாகவும் நினைத்து வருவதால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இது ஆரோக்கியமான வளர்ச்சியாக இருக்க முடியாது என்று பேசிய வலைப்பேச்சு பிஸ்மி சினிமாவை பொருத்தவரை செருப்பாக தான் நினைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த செருப்பை எந்த இடத்தில் கழட்டி விட வேண்டுமோ அந்த இடத்தில் கழட்டி விடுவது தான் ரசிகர்களின் ஆரோக்கிய வளர்ச்சியாக இருக்கும் என்ற பரபரப்பான தகவலை பகிர்ந்து இருக்கிறார்.

மேலும் ஏற்கனவே சுதா கோங்குரா திரைப்படத்தில் நடித்த தேசிய விருதை பெற்ற சூரியா தற்போது அவரின் புறநானூறு படத்தையும் புறக்கணித்து இருப்பதால் இந்த படத்தில் தனுஷ் அல்லது சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து இந்த பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது என்று சொல்லலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …