வெற்றியாளரின் எண்ணங்கள்

வெற்றியாளர்களின் எண்ணம் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? தெரியாது என்றால் அதை உணர்த்துவதற்காக உங்களுக்கு ஒரு சிறிய கதையை இப்போது கூறுகிறேன். கேளுங்கள். 

மகாபாரதத்தில் துரோணாச்சாரியாரின் ஆசிரமத்தில் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் கல்வி பயின்றார்கள் என்பது உங்கள்  நன்றாகத் தெரியும். அவர்களின் குருகுலம் முடிந்தவுடன் ஒவ்வொருவருக்கும் தற்போது நடக்கும் தேர்வு போல துரோனாச்சாரியாரியாரும் தேர்வினை நடத்தினார்.  

அத்தேர்வில்வில் வில்வித்தையில் சிறந்த வீரர் யார் என்று கண்டறிவதற்காக ஒரு தேர்வினை துரோணாச்சாரியார் நடத்தினார். பாண்டவர்களில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து மரத்தில் அமர்ந்திருக்கும் கிளியை நோக்கி அன்பினை செய்யும்படி கூறினார் ஒவ்வொருவரிடமும் என்ன தெரிகிறது என்று கேட்டார். ஒருவர் மரம் தெரிகிறது என்றார். மற்றொருவர் கிளை தெரிகிறது என்றார். மேலும் ஒருவர் கிளி தெரிகிறது என்றார் .மற்றொருவர் இறகு தெரிகிறது என்றார். 

அர்ஜுனன் மட்டும்தான் குருவின் அது வினாவிற்கு மிகச்சிறப்பாக பதிலளித்தார் அந்த பதில் என்னவென்றால் கிளியின் கண் தெரிகிறது என்றார். குரு துரோணாச்சாரியார் உன் இலக்கை நோக்கி உனது வில்லை செலுத்துவாய் என்றார். 

இந்த கதையில் இருந்து என்ன தெரிகிறது என்றால் அவனது இலக்கு அந்தப் பறவையை வீழ்த்துவதில் மிகச் சிறப்பாக இருந்தது. எனவே சரியான இலக்கை நிர்ணயித்தல் மட்டுமே நாம் வெற்றியடைய முடியும். வெற்றியாளர்களின் எண்ணமும் அவர்களின் இலக்கை நோக்கியே இருக்க வேண்டும்.

 உன்னால் முடியும்:

உன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை உன்னுள் இருக்கும் வரை உன்னை எவரும் வெல்ல முடியாது. என்னால் மட்டுமே இந்த காரியத்தை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உன்னுள் விதையாய் இருந்தது என்றால் அது மிகப் பெரிய விருட்சமாக விரைவில் வளரும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. முடியும் முடியும் என்பதை நீ தாரக மந்திரமாகக் கொண்டால் உன்னால் எதுவும் செய்ய முடியும்.

தன்னால் முடியும் என்ற நம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டதனால் தான் ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிக்க முடிந்தது .அதேபோல் தன்னால் முடியும் என்று எண்ணியதால் மட்டுமே மேரி கியூரி அம்மையார் ரேடியத்தை கண்டுபிடிக்க முடிந்தது .எண்ணற்ற இன்னல்கள் அந்த ஆய்வில் ஏற்பட்டபோதும்  அம்மையார் தனது விடாமுயற்சியால் ரேடியத்தை கண்டுபிடித்தார் .

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …