நடிகர் விஜயின் திரை வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த ஒரு படம் என்றால் அது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தை கூறலாம்.
இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்ததன் மூலம் இவருடைய மார்க்கெட் எக்குத்தப்பாக எகிறியது. இந்த படத்தின் வசூல் 100 கோடியை தாண்டி சென்றது. கடந்த 2012ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
அதுவரை சட்டை மேல் சட்டை போட்டுக்கொண்டு.. விதவிதமான பஞ்ச் வசனம் பேசிக்கொண்டு வில்லன் கேங்-ஐ தெருத்தெருவாக துறத்திக்கொண்டிருந்த நடிகர் விஜய் இந்த படத்தின் மூலம் தன்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச்சென்றார்.
இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. இந்தியாவின் எல்லைச்சாமிகளாக இருக்கும் ராணுவ வீரர்களுக்கு இந்த படத்தை டெடிகேட் செய்வது போல “ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம்” என்ற வசனத்துடன் முடியும் இந்த திரைப்படம் தமிழக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான பல படங்கள் ஹிட் ரகமாக அமைந்தன. துப்பாக்கி படத்தில் முதன்முதலாக ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு நடிகர் அக்ஷய் குமாருக்கு தான் கிடைத்த தான்.
அப்போது துப்பாக்கி கதையை முழுமையாக கேட்டுவிட்டு சரி நடிக்கிறேன் என்று கூறியுள்ளார் அக்ஷய் குமார். பின்னர் சில நாட்கள் கழித்து ஒரு சில காரணங்களை கூறி பட வாய்ப்பை தட்டி கழித்து வந்திருக்கிறார். இதனால் வெறுத்துப்போன இயக்குனர் முருகதாஸ் இந்த கதையை நடிகர் விஜயிடம் கூறியிருக்கிறார்.
இந்த கதையை விஜய்யிடம் கூறும் முன்பு அக்ஷய்குமார் இடமும் கேட்டிருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ். இந்த படத்தை தமிழில் எடுப்பதாக இருந்தால் நடிகர் விஜயை வைத்து எடுங்கள் அவர் சம்மதம் தெரிவித்தால் நிச்சயம் இந்த படத்தை தமிழில் துவங்குங்கள் அதன் பிறகு ஹிந்தியில் நாம் எடுத்துக் கொள்ளலாம் என்று அக்ஷய்குமார் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து நடிகர் விஜயிடம் ஏ ஆர் முருகதாஸ் இந்த கதையை கூறுயிருக்கிறார். நடிகர் விஜய்யும் இந்த படத்தை உடனே ஒப்புக்கொண்டு படத்தின் வேலைகளை துரிதமாக தொடங்கியுள்ளார்.
நடிகர் விஜயின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த இந்த திரைப்படத்தில் முதன் முதலாக நடிகர் அக்ஷய்குமார் நடிக்கவிருந்தாரா..? என்ற விவரம் அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர்.