கடுமையான வெயில் சுட்டெரிக்க கூடிய இந்த காலகட்டத்தில் அதிகளவு அக்குள் வியர்வை – யால் அனைவருமே அவதிப்படுகிறோம்.
வெயிலிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள சன் ஸ்கிரீனை அதிக அளவு நீங்கள் பயன்படுத்தினாலும் குறிப்பிட்ட சில பாகங்களில் இருந்து வெளிவரும் வியர்வையை உங்களால் கட்டுப்படுத்த முடியாமல் பல பாதிப்புகள் ஏற்படும்.
இதன் மூலம் உங்களுக்கு ரேசர் பம்ப்ஸ்,டார்க் ஸ்கேர்ஸ் மற்றும் ஸ்கின் இரிட்டேஷன் உருவாகும். அதுவும் சென்சிடிவான பகுதிகள் என்றால் கேட்கவே வேண்டாம்.
எனவே இந்த வெயிலில் குறைந்தது இரண்டு முதல் நான்குமுறையாவது அந்தப் பகுதிகளை நீங்கள் நீரில் கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.
அக்குள் பகுதியில் இருக்கும் முடிகளை நீக்கி விட்டு நீங்கள் தரமான ரோல் ஆன்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் அதிக அளவு வியர்வை அந்த இடத்தில் ஏற்படாமல் உலர்வாக இருக்கும்.
மாய்ஸ்ரைஸ் கிரீம்களை அந்தப் பகுதியில் நீங்கள் தேய்த்து விடுவதின் மூலம் உங்களுக்கு எரிச்சல் ஏற்படாமல் இருப்பதோடு பிஹெச் பேலன்ஸ் ஆவதின் காரணமாக அதிக அளவு வியர்வை ஏற்படாது.
மேலும் குளிக்கும் போது மஞ்சள் பொடி, கடலை மாவு இவை இரண்டையும் கலந்து நீங்கள் அந்த பகுதியில் போட்டு அது உலர்ந்த பின்பு நன்கு கழுவி குளிப்பதின் மூலம் அதிக அளவு வியர்வை ஏற்படாது.
பொதுவாக இந்த கோடைகாலத்தில் நீங்கள் நலுங்குமாவை பயன்படுத்தி குளிப்பதன் மூலம் உங்களை வியர்வை தொல்லையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
நுங்கு பட்டைகளை அக்குள் பகுதிகளில் நன்கு தேய்த்து விட்டு குளிப்பதில் மூலம் அதிக அளவு வியர்வை ஏற்படாமல் தவிர்க்க முடியும். மேலும் இதன் மூலம் வியர்க்குரு தொல்லையிலிருந்தும் நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம்.
மேற்கூறிய வழிமுறைகளை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் அக்குள் பகுதிகளில் ஏற்படுகின்ற வியர்வை தொல்லையால் அவதிப்பட வேண்டிய அவசியம் இல்லை.