குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க..! – பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

சிலரது வீட்டில் எப்பொழுது பார்த்தாலும் சண்டை சச்சரவு, கடன் பிரச்சனை, பொருளாதார பிரச்சனைகள், வீட்டில் நிம்மதியற்ற சூழல், இப்படி காலை விடிந்தது முதல் இரவு படுக்கும் வரை ஏதேனும் ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொண்டு இருப்பார்கள்.

கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லாதது.. இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வருவது.. கடன் பிரச்சனையால் அல்லது வேறு ஏதாவது ஒரு பிரச்சனையால் வீட்டில் இருப்பவர்கள் நிம்மதி இழப்பது என மன அமைதி இல்லாமல் இருப்பது.. இப்படியாக பலரும் கடிமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

இப்படி இருப்பவர்கள், அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து… எதனால் இப்படியான பிரச்சினைகள் நடக்கிறது..? என்று சிந்தித்தால் உப்பு சப்பு இல்லாத ஒரு காரணம் தான் அந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் மூல காரணமாக இருக்கும்.

பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

ஆனால் அந்த உப்பு, சப்பில்லாத காரணத்தை மிகப்பெரிய விஷயமாக நினைத்துக் கொண்டு தங்களுடைய அமைதியை கெடுத்துக் கொண்டு தங்களை சுற்றி இருப்பவர்களின் அமைதியும் கெடுத்து கொண்டு வாழ்க்கையை கடினமான ஒன்றாக மாற்றி வைத்திருப்பார்கள்.

இதற்கு முக்கிய காரணம் அவர்கள்தான் என்றாலும் கூட. அவர்களை அந்த நிலைக்கு தள்ளக் கூடியது அவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் என்று கூறலாம்.

பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

இந்த எதிர்மறை ஆற்றல்கள் பல்வேறு காரணங்களால் வீட்டிற்குள் புகுந்துவிடும். அவர்கள் அப்படி வாழ்கிறார்கள், இவர்கள் இப்படி வாழ்கிறார்கள், நம்மால் அப்படி வாழ முடியவில்லை என்ற ஒரு ஏக்கம் அல்லது நமக்கு தெரிந்தவர்களுடைய அல்லது நம்முடைய நண்பர்களுடைய கணவனும் மனைவியோ அவர்களுடைய மனைவி அல்லது கணவரிடம் எவ்வளவு அன்யோன்யமாக இருக்கிறார்கள்.. சந்தோஷமாக வாழ்கிறார்கள்.. நம்மால் அப்படி வாழ முடியவில்லை என்ற ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடாக இருக்கலாம்.

நாம் எதிர்பார்த்தது போல் நம் கணவர் நம்மிடம் நடந்து கொள்ளவில்லையே.. நாம் எதிர்பார்த்தது போல் நம் மனைவி நம்மிடம் நடந்து கொள்ளவில்லையே.. என யோசிப்பது.. இப்படி பல காரணங்களை கூறலாம்.

பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

இந்த எண்ணம் மனிதனின் இயல்பான குணம் இதனை மாற்ற முடியாது என்றாலும் கூட இப்படியான எண்ணம் வராமல் அடியோடு தகர்ப்பதற்கு கையில் இருக்கும் ஒரே ஆயுதம் என்னவென்றால் அது அறிவியல் கிடையாது. ஆன்மீகம் மட்டுமே.

ஆன்மீகம் மட்டுமே இருக்கும் வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பதை கற்றுக் கொடுக்கக்கூடிய கையில் இருக்கும் சாவி கண்முன் இருக்கும் ஆசான் என்று கூறலாம்.

பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

அந்த வகையில், இன்று பெண்கள் தங்களுடைய குடும்ப சூழலை சுற்றுப்புறத்தை தங்களுடைய மனநிலையை எப்படி வளமாக வைத்துக் கொண்டு வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதற்கான சில ஆன்மீக குறிப்புகளை தான் இங்கே நாம் பார்க்க போகிறோம்.

இதையெல்லாம் செய்து விட்டால்.. என் வீட்டில் மகிழ்ச்சி நிலைத்து விடுமா..? இதெல்லாம் செய்து விட்டால் என் குடும்பம் முன்னேறி விடுமா..? பெண்கள் என்றாலே இதற்குத்தானா..? என்று பெண்ணியம் என்ற பெயரில் விதண்டா வாதம் செய்பவர்கள் நீங்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது கிடையாது.

பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

ஏதாவது ஒரு வழியில் என் குடும்பத்திற்கான நல்ல வழி பிறக்காதா..? மகிழ்ச்சி தங்காதா…? என்ற ஒரு ஏக்கத்தில் இருப்பவர்கள் கீழ் வரக்கூடிய விஷயங்களை தவறாமல் செய்து வருவதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை சக்திகள் நீங்கி உங்களுடைய மனம் ஒரு நிலைக்கு வந்து அதன் பிறகு உங்கள் வாழ்க்கை.. உங்களுடைய எதிர்காலம் சிறப்பான முறையில்  மாறுவதை கண்கூடாக பார்க்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.

வாருங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்

  • முதலில் காலையில் எழுந்தவுடன் பெண்கள் வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிட வேண்டும்.
  • தினமும் வீட்டில் ஒரு நெய் தீபம் ஏற்றி வர லட்சுமி கடாட்சம் வரும்.
  • சாம்பிராணியுடன் சிறிதளவு வெண்கடுகு போட்டு தூபம் காட்டினாள் துஷ்ட தேவதைகள் விளகுவார்கள்.
  • வெள்ளிக்கிழமைகளில் பஞ்சகவ்ய விளக்கு ஏற்றினால் செல்வம் சேரும்
  • வளர்பிறையில் சிவப்பு செம்பருத்தி பூவில் நாம் வேண்டுதலை பெனாவ்ல் எழுதி ஒரு அகல் விளக்கு ஏற்றி வராஹி அம்மனிடம் வேண்டினால் வேண்டியது நிறைவேறும்.
  • மாதம் 2 கிலோ உருளைக்கிழங்கு ஏழைகளுக்கு கொடுத்தால் நம் கஷ்டம் நீங்கி நலமாய் வாழலாம்.
  • நாம் இல்லத்தில் மாதுளைச் செடி வளர்த்தால் லட்சுமி கடாட்சம் நிறையும்.
  • செல்வம் நிலைத்து நிற்க வெள்ளிக்கிழமைகளில் பால், தயிர், உப்பு, மஞ்சள் இவற்றை கடனாகவோ, தானமாகவோ கொடுக்கக் கூடாது.( கோயில் பிரகாரத்தில் நீங்கள் பிரசாதமாக கொடுக்கும் பொருட்களுக்கு நாள் கிழமை எல்லாம் தடை கிடையாது. வீட்டில் இருந்து கொடுக்கும் போது மட்டுமே இவற்றை கடைபிடிக்க வேண்டும் )
  • பொதுவாகவே பெண்கள் விரதம் இருப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இப்படி விரதமிருந்து இறைவனை வேண்டிக் கொண்டதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படுவது மூலம் தனது குடும்பத்திற்கும், தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கும் நன்மை நடக்கும்.
  • திருமணமான பெண்கள் கால்களில் மெட்டி அணியும் பொழுது ஒரு விரலில் மட்டும் தான் அணிய வேண்டும்.
  • பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தலை குளித்து வசதிக்கு ஏற்ப தலையில் சிறிதளவு மல்லி பூ வைத்துக்கொண்டு சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் கணவனிடம் உங்களுக்கு நான் எப்படி இருந்தால் பிடிக்கும் என்று கேட்டு தொடர்ந்து அது போல நடந்து கொள்வது கணவன் மனைவிக்கு உள்ளான அமோனியம் மற்றும் நெருக்கத்தை அதிகரிக்கும்
  • நம் வீட்டிற்கு வரும் சுமங்களி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் கண்ணாடி ,சீப்பு, மஞ்சள், வளையல், குங்குமம், தாலி கயிறு, தேங்காய் கொடுத்தால் கொடுப்பவரின் மாங்கல்யம் பலம் பெறும் .
  • குதிரை லாடம் வாங்கி கதவின் நிலை வாசலில் ஒட்ட நற்பலன் கிடைக்கும்.
  • ஒரு சிறிய மண்பானையில் ஒரு ரூபாய் நாணத்தை நிரப்பி திறந்தவாறு வீட்டில் கிழக்கு திசையில் வைத்தால் செல்வம் சேரும் பண வரவு அதிகரிக்கும்.
  • விநாயகர் ஆலயத்தில் 21 மட்டை தேங்காயை கொடுத்தால் நல்ல வேலை, பணவரவு அமையும்.
  • நிறைந்த பௌர்ணமி அன்று இரவில் ஐந்து ரூபாய் அல்லது ஒரு ரூபாய் நாணத்தை அன்று இரவு முழுவதும் நிலா ஒளியில் வைத்து விட்டு காலையில் எடுத்து நம் பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் செலவுகள் கட்டுக்குள் வரும், பணவரவும் அதிகரிக்கும்.
  • செவ்வாய் அன்று எந்த பொருள் வாங்கினாலும் செல்வம் சேரும்.
  • கணவன் விரும்பி உண்ணக்கூடிய உணவுகளை சமைத்து கொடுக்க வேண்டும். இன்று என்ன செய்யட்டும் என்று கேட்டு அவர் கேட்பதை சுவையாக செய்து கொடுங்கள்.
  • இரவு படுக்கையில் கணவரின் முட்டி பகுதியில் இருந்து கணுக்கால் பகுதி வரை இருக்கக்கூடிய பகுதியை பெண்கள் பிடித்து விட வேண்டும் கணவரின் கால் பகுதியில் சனிபகவான் கூடியிருக்கிறார் உழைப்பதற்கு மூல காரணமாக தொழில் காரர்களாக இருக்கும் சனி பகவான் பெண்களின் கைகளில் குடியிருக்க கூடிய சுக்கிர பகவானின் தொடர்பை பெரும்பொழுது அந்த வீட்டில் பண வரவு என்பது ஆயிரங்களில் இருந்து லட்சங்களாக அதிகரிக்கும் என்பது பலரும் கூறும் அனுபவ உண்மை இதனை பெண்கள் தவறாமல் செய்து வர வேண்டும்.
  • மேற்கூறிய அனைத்தையும் ஆத்மார்த்தமான நம்பிக்கையுடன் செய்ய வேண்டும் என்பது தான் உச்ச கட்ட உண்மை.

இப்படியான விஷயங்களை தொடர்ந்து கடைபிடித்து வருவது உங்களுடைய மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உங்கள் சுற்றுப்புரத்தை மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றும். முயற்சி செய்து பாருங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …