“சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு போங்க..!” – உடனடியா சொந்த வீடு கட்டுவீங்க..!

கையில் எவ்வளவு பணம் இருந்தாலும் சொந்த வீடு கட்ட முடியவில்லை என்று நினைப்பவர்கள் உடனடியாக சிறுவாபுரியில் இருக்கும் முருகன் கோயிலுக்கு சென்று வேண்டுதல்களை நீங்கள் வைத்தால் கட்டாயம் முருகன் உங்களுக்கு சொந்த வீடு கட்டக்கூடிய யோகத்தை தருவார்.

இதன் மூலம் உங்கள் சொந்த வீட்டு கனவு நிறைவேறும். ஏன் வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் கூட இந்த கோயிலுக்கு சென்று வந்தால் எப்படியும் சொந்த வீட்டை கட்டி விடுவீர்கள். அதற்கான சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் உங்களுக்கு கூடி வரும்.

இந்த கோயிலானது சென்னைக்கு அருகில் அமைந்துள்ளது. உங்கள் குறையை நீக்க முருகப்பெருமாள் இங்கு உங்களுக்கு வேண்டிய வரத்தை தருவதற்காக காத்திருக்கிறார்.

குறிப்பாக சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று அந்தக் கோயிலின் உள் இருக்கக்கூடிய கற்களை எடுத்து அடுக்கி வைத்து விட்டு வந்தாலே உங்கள் கனவு நிறைவேறும் என்பது ஐதீகம்.

வீடு கட்டுவதற்கு மட்டுமல்லாமல் திருமணம் ஆகாத நபர்களும் இந்த கோயிலுக்கு சென்று முருகனை வழிபட்டு வந்தால் மிக விரைவில் டும் டும் டும் நடக்கும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோயிலில் இருக்கும் முருகப்பெருமானை அருணகிரிநாதர் புகழ்ந்து பாடி இருக்கிறார். எனவே அருணகிரிநாதர் அடித்த திருப்புகழை இந்தக் கோயிலில் அமர்ந்து நீங்கள் பாடுவதின் மூலமும் நெய் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலமும் உங்கள் புது வீட்டு கனவு பலிக்கும்.

நீங்கள் வீடு கட்டும் வரை முருகப்பெருமானின் மந்திரங்களை நித்தியம் பாராயணம் செய்வதின் மூலம் உங்களுக்கு வீடு கட்டக்கூடிய யோகம் வந்து சேரும். குறிப்பாக அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பதிகத்தை இந்தக் கோயிலில் அமர்ந்து உச்சரித்து விட்டு உங்கள் வீட்டுக்குச் சென்று தினமும் அதை பாராயணம் செய்யுங்கள்.

கட்டாயம் உங்கள் கனவு நிறைவேறும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. திருப்புகழ் முழுவதையும் படிக்க முடியாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மந்திரத்தை மட்டும் உச்சரித்தால் போதுமானது.

மந்திரம்

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற…வருளாலே

அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனு முமையாளு… மகிழ்வாக

மண்டலமு முநிவோரு மெண்டிசையிலுளபேரு

மஞ்னனு மயனாரு… மேதிர்காண

மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற மைந்துமயிலுடனாடி … வரவேணும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …