இதை பண்ணா தான் வாய்ப்பு கிடைக்குமா..? – அப்போ பண்ண முடியாது என கூறும் 5 நடிகைகள்..!

சினிமா ஹீரோயின்கள் என்றாலே படத்தில் வாய்ப்பு கிடைக்க கவர்ச்சியாக நடிக்க வேண்டும் மற்றும் சில வெளிப்படையான காட்சிகளில் நடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அவ்வாறு ஒரு சில நேரங்களில் படத்திற்கு ஏற்ப கவர்ச்சி காட்சிகளையும் ஏற்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகுகின்றனர்.

இதுபோன்று எந்த சூழ்நிலையாக இருந்தாலும் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று உறுதியாக கூறி தேடி வந்த வாய்ப்பை நிராகரித்தவர்களும் உண்டு. அவ்வாறு நீங்கள் சொல்வதெல்லாம் செய்ய மாட்டேன் என்று கூறி வெற்றி பெற்ற ஐந்து நடிகைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

அபர்ணாதாஸ்:

Aparna Das

மலையாள படங்களில் நடித்ததன் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானவர் நடிகை அபர்ணாதாஸ். பீஸ்ட் படத்தில் இரண்டாவது ஹீரோயின் என்று சொல்லும் அளவுக்கு ஸ்க்ரீன் ஸ்பேஸ் பெற்று அசத்திய இவர் நடிகர் கவின் நடிப்பில் வெளியான “Dada” The Appa என்னும் படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார்.

இப்படத்தில் இவரின் நடிப்பு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. மேலும் என் படங்களில் கவர்ச்சி இருக்காது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அதற்கு ஏற்ற படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக கூறிய பட வாய்ப்பு பெற்று வருகிறார்.

நித்யா மேனன்:

Nithya Menon

தெலுங்கு படங்களின் மூலம் அறிமுகமானவர் நித்யா மேனன். திரைத்துறையில் நடிக்க விருப்பம் இல்லாத இவர் பத்திரிக்கையாளராக ஆக வேண்டும் எந்ரூ விரும்பியதாக பல்வேறு இடங்களில் பதிவு செய்துள்ளார்.

அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் மெர்சல், காஞ்சனா 2 போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார்.

அதிலும் குறிப்பாக திருச்சிற்றம்பலம் படத்தில் இவரின் எளிமையான நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

இவரும் நான் எந்த சூழ்நிலையயிலும் கதைக்கு தேவைப்படாத நிலையில் நிச்சயம் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ்:

Keerthy Suresh

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் தமிழில் இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன், தொடரி, பைரவா, சாமி 2 போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக பதிந்து விட்டார்.

இவர் எந்த படங்களிலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்காமல் இன்று வரை தனக்கு சரியாக படும் கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வருகிறார். இருந்தாலும், பட வாய்புகள் குறைந்த போது தெலுங்கில் ரங்தே என்ற படத்தில் படு சூடான படுக்கையறை காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருந்தார் அம்மணி என்பது நினைவில் கொள்ள தக்கது.

சாய் பல்லவி:

Sai Pallavi

நான் நடித்த படங்களை இருபது ஆண்டுகள் கழித்து என் குடும்பத்தினருடன் அமர்ந்து பார்க்கும் போது யாரும் முகம் சுழிக்காத அளவுக்கு இருக்க வேண்டும். அப்படியான கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்று நடித்து வருகிறேன். கவர்ச்சி காட்டினால் தான் சினிமாவில் நடிக்க முடியும் என்ற நிலை வந்தால் நிச்சயம் சினிமா-வை விட்டே சென்று விடுவேன் என்று கூறியுள்ளார் சாய் பல்லவி.

ஷீலா ராஜ்குமார்:

Sheela Rajkumar

பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதா பாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ள நடிகை ஷீலா ராஜ்குமார் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி, நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். மேலும், தன்னுடைய நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பேன். கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார் அம்மணி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *