சம்பள ரேட்டை உயர்த்திய குந்தவை திரிஷா… அப்செட்டில் திரை பட உலகம்…!

நடிகை திரிஷா திரை உலகில் நுழைந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனினும் தற்போது வரை அதே இளமையோடும் பொலிவோடும் நடித்துவரும் நடிகையின் வரிசையில் இவரை கூற முடியும்.

 இடையில் இவருக்கு பட வாய்ப்பு இல்லாமல் தவித்த போது இவரது மார்க்கெட்டை தூக்கி விடுவது போல இவருக்கு அமைந்த கேரக்டர் தான் குந்தவை. இந்த கேரக்டரை மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் இவர் செய்திருந்தார்.

 இதனை அடுத்து இந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றதோடு அதிகளவு வசூலில் சாதனை புரிந்தது. இந்தப் படத்தில் இவரது கேரக்டரை இவர் திறம்பட செய்திருந்ததால் ரசிகர்கள் இவரை மீண்டும் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.

 ஏற்கனவே தென்னிந்திய நடிகைகளில் அதிக அளவு சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா திகழ்ந்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது இவர் வந்திருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களையும் கலங்க வைத்துள்ளது.

குந்தவை கேரக்டரின் மூலம் இவருக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது என்று தான் கூற வேண்டும். சம்பளத்தைப் பொறுத்தவரை முதலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு அடுத்த இடத்தில் சமந்தா இருந்தார்.

இந்த சூழலில் திரிஷா ஒரு படத்திற்கு 1.5 கோடி சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்த இவர் தற்போது மூன்று கோடி வரை சம்பளம் கேட்கிறாராம்.

 பொன்னியின் செல்வன் படத்தால் அம்மணிக்கு மவுஸ் மிகவும் கூடிவிட்டது என்பதால் நிறைய தயாரிப்பாளர்கள் அவரை நடிக்க வைக்க அந்த சம்பளத்தை கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்பது தான் முக்கியமாக கருதப்படுகிறது.

 இதை அடுத்து அடுத்த படங்களில் கையெழுத்திட்டு வரும் திரிஷா லம்பாக சில அமௌன்டை வாங்குவது என்ற திடமான எண்ணத்தில் இருக்கிறார். சோ இனி திரிசா காட்டில் செகண்ட் இன்னிங்ஸில் தூள் கிளப்பி விளையாடுவார் என்பது தெரிந்து விட்டது.

சம்பளம் அதிகமாக வாங்கக்கூடிய நடிகைகளின் வரிசையில் இவரது பெயர் டாப்புக்கு வரும் என தெரிய வந்துள்ளதால் ரசிகர்கள் வாயை பிளந்து ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …