டிசம்பர் 30 அன்று வெளிவரும் குந்தவைப் பிராட்டி @ திரிஷாவின் அடுத்த படம் ராங்கி…!!

 இயக்குனர் சரவணன் இயக்கிய எங்கேயும் எப்போதும்  படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. இந்த படத்தில் இவர் நேர்த்தியான முறையில் தனது இயக்கும் திறனை வெளிப்படுத்தி இருப்பார். இதனை அடுத்து தற்போது இவர் இயக்கி இருக்கக்கூடிய படம் தான் ராங்கி.

 இந்த படத்தின் பெயரிலேயே படத்தின் கதைக்களம் எப்படி இருக்கும் என்பதை  ஏறக்குறைய  பட டைட்டிலே உணர்த்திவிட்ட நிலையில் இந்த படத்தில் யார்? யார்? நடித்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

 ஏ ஆர் முருகதாஸ் படத்திற்கான கதையை எழுதிய நிலையில் ஆக்சன் படமாக உருவாகியுள்ள எந்த திரைப்படத்தில் நடிகை திரிஷா தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் இளசுகள் அனைவரையும் கட்டி இழுத்த இவர் தற்போது இந்த படத்தில் நிச்சயமாக நல்ல பெயரை பெறுவார் என்று அனைவரும் கூறி வருகிறார்கள்.

மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த திரைக்கதை தயாராகிவிட்ட நிலையில் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்ற தகவல்கள் கசிந்து வந்தது. இதனை அடுத்து தற்போது இந்த படம் வரும் டிசம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் ரசிகர்களின் பார்வைக்காக வெளிவர உள்ளது.

இந்த தகவலை லைக்கா நிறுவனம் ஒரு வீடியோவின் மூலம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோவில் நடிகை திரிஷா நடித்துள்ள சில ஆக்சன் காட்சிகளும் இடம் பெற்று இருப்பதால் ராங்கி படத்தை பார்ப்பதற்கான எதிர்பார்ப்பு எகிரி உள்ளது.

 அதுமட்டுமல்லாமல் அதே தேதியில் விஜய் ஆண்டனி நடித்திருக்க கூடிய தமிழரசன் படமும் வெளிவர இருப்பதால் இந்த படத்துக்கு ஈடு கொடுக்கக்கூடிய காம்பெடிஷன் படமாக வாங்கி அமையுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

 இந்த தமிழரசன் படத்தில் விஜய் ஆண்டனி உடன் சுரேஷ்கோபி, ரம்யா நம்பீசன், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும் இளையராஜா இசையமைப்பில் யோகேஸ்வரன் இயக்கியிருக்கிறார்.

 இந்த இரண்டு படமே ஆக்சன் படமாக இருப்பதால் எந்த படம் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வசூலை வாரி குவிக்குமா என்பதை காத்திருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். குந்தவையாக நடித்துக் கலக்கிய ராங்கி திரிஷாவா? அல்லது விஜய் ஆண்டனியா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …