கோயம்புத்தூர்-ல இந்த விஷயங்கள் எனக்கு ரொம்ப புடிக்கும் – நடிகை திரிஷா ஓப்பன் டாக்..!

திரிஷா, (Trisha) பொன்னியின் செல்வன் 2 பிரமோஷனில் இப்போது பிஸியாக இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு, த்ரிஷாவின் ரேஞ்சே வேறுமாதிரி ஆகி விட்டது. பொது இடங்களில், மீடியாக்களில் த்ரிஷாவுக்கு பெருகி வரும் ஆதரவும், வரவேற்பும் நயன்தாரா இடத்தை த்ரிஷா பிடித்து விட்டாரோ, என நினைக்கும் அளவுக்கு அம்மணி, இப்போதைக்கு வேற லெவலில் இருக்கிறார்.

த்ரிஷா. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், மிஸ் சென்னை பட்டம் வென்ற பின், தமிழ் சினிமாவில் லேசா லேசா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் ஹரி இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக நடித்த சாமி படம், த்ரிஷாவை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமாக்கியது.

Trisha

அடுத்து கில்லி, குருவி, உனக்கும் எனக்கும், மன்மதன் அம்பு, ராங்கி, விண்ணைத் தாண்டி வருவாயா, அரண்மனை 2, ஆறு, சகலகலா வல்லவன், சம்மர், பரமபதம், உனக்கு 20 எனக்கு 18, ஆதி, சதுரங்கவேட்டை 2 உள்ளிட்ட பல படங்களில் த்ரிஷா நடித்துள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக பேட்ட படத்திலும் நடித்தார் த்ரிஷா. தமிழ் சினிமாவுக்குள் வந்து 20 ஆண்டுகள் கடந்தும், இன்னும் அழகும் இளமையும் மாறாத அழகில் அம்சமாக தெரிகிறார் த்ரிஷா. வயது, இவரது அழகை மறைக்கிறதே தவிர, இன்னும் 25 வயது பெண் போலவே தோற்றத்தில் காட்சியளிக்கிறார் த்ரிஷா.

Trisha

96 படத்துக்கு பிறகு, இன்னும் ரசிகர்களை தன்வசப்படுத்திய த்ரிஷா பொன்னியின் செல்வன் நடித்த பிறகு, அவரது மார்க்கெட் மேலும் பலமடங்கு உயர்ந்தது. அதுவரை ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த த்ரிஷா, அப்படியே அதை இரட்டிப்பாக்கி விட்டார் என்று கூறப்படுகிறது

பொன்னியின் செல்வன் 2ம் பாகம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படங்களைத் தொடர்ந்து, இன்னும் இவரது சம்பளம் உயர்வதற்காக வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பாக, பொன்னியின் செல்வன் குந்தவை கேரக்டரில் த்ரிஷாவின் அழகும், மிருதுவான நடிப்பும், மென்மையான பேச்சும் ரசிகர்களை சொக்க வைத்து விட்டது.

Trisha

இந்நிலையில், வரும் 28 ம் தேதி பொன்னியின் செல்வன் 2ம் பாகம் ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி படக்குழு, புரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. முக்கிய நகரங்களுக்கு சென்று, நேரடியாக ரசிகர்களை சந்தித்து படத்தின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்க, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியை தொடர்ந்து, ‘சோழா பயணம் துவங்கியது’ என்ற கேப்சனுடன், கோவைக்கு விமானத்தில் பயணப்பட்டது.

Trisha

இதில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என படத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள், இதில் பங்கேற்று உள்ளனர். சென்னை, கோவை, கொச்சின், திருவனந்தபுரம், திருச்சி என பல முக்கிய நகரங்களுக்கு இந்த நட்சத்திரக்குழு சென்று, ரசிகர்களை நேரடியாக சந்தித்து, பொன்னியி்ன் செல்வன் பாகம் 2 படத்துக்கான, எதிர்பார்ப்பை எகிறச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Trisha

கோவையில் நடந்த புரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற த்ரிஷா, ரசிகர்கள் மத்தியில் பேசுகையில், இந்த அன்பும், ஆதரவும் ரசிகர்களாகிய நீங்கள் கொடுத்ததுதான். கோயம்புத்தூர் என்றாலே, சில விஷயங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். குறிப்பாக, கோயம்புத்தூரில் பேசுகிற அழகான தமிழ், இங்க இருக்கிற சாப்பாடு, ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும், என்றார்.

Trisha

அப்போது, ரசிகர்கள் லியோ லியோ என கூச்சலிட, ஆமாம், இப்போது லியோ ஷூட்டிங்கில் இருந்துதான் இங்கே வந்திருக்கிறேன். அந்த படத்தை பற்றி டைரக்டர் லோகேஷூம், தளபதி விஜய்யும்தான் எதுவும் சொல்லணும், நான் எதுவும் சொல்லக்கூடாது என சிரித்தபடி கூறி சமாளித்தார்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …