தமிழ் திரையுலகில் நடிகைகள் பற்றிய கிசுகிசுக்கள் எப்போதும் வருவது இயல்பான ஒன்று தான். அந்த வரிசையில் 40 வயதைத் தொட்டு இருக்கக்கூடிய நடிகை திரிஷா இதுவரை திருமணம் செய்து கொள்வதற்கான காரணங்கள் பல வகைகளில் பல விதமாக பேசப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் திரிஷா ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை யார் யாரை காதலிக்கிறார் என்பது பற்றிய விஷயங்கள் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளது. அதில் முதலிடத்தில் உள்ள நபர் விஜய். நடிகை திரிஷா கில்லி படத்தில் நடித்தபோது தளபதி விஜய் உடன் கசமுசா ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ராணா டகுபதி உடன் இவருக்கு காதல் என்ற செய்தி வந்தது. அதை உறுதி செய்யும் விதமாக இருவரும் பல்வேறு பகுதிகளுக்கு இரவு நேரங்களில் சுற்றி வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் வெளி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காதல் நீண்ட நாள் பேசப்பட்டும் வந்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் முத்தமிடுவது போல் உள்ள போட்டோக்கள் வெளியாகி தென்னிந்திய திரைப்பட வட்டாரத்தையே ஒரு உலுக்கு உலுக்கியது. பின்பு இந்த விஷயம் அப்படியே உப்பு சப்பு இல்லாமல் போய் விட்டது.
மேலும் த்ரிஷா கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொழிலதிபர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த நிச்சயதார்த்தமும் ஐந்து மாதங்களில் செல்லாது எனக்கும் அவருக்கும் செட்டாகாது. எனவே நான் அதை நிறுத்திவிட்டேன் என்று அறிக்கை விட்டார். இந்த பின்னணியில் நடிகர் தனுஷ் இருப்பதாக கூறப்படுகிறது.
2020ஆம் ஆண்டில் மீண்டும் திரிஷா சிம்புவுடன் இணைந்து டேட்டிங் செய்ததாகவும், விரைவில் சிம்புவை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வதந்திகள் பரவி வந்தது.
தற்போது திருமணம் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நடிகை திரிஷா தன்னை புரிந்து கொண்டு வரக்கூடிய கணவனை காதலித்து திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருக்கிறார். மேலும் கிசுகிசுக்கள் வருவதும் போவதும் துறையைச் சார்ந்தவர்க்கு புதிதில்லை எனவே அவற்றை எல்லாம் கண்டு கொள்வதே இல்லை என்று கூறியிருக்கிறார்.