நாங்க தாங்கி பிடிக்க வரலாமா..? – திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வருபவர் தான் நடிகை திரிஷா. இவர் சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்திருந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.

வரலாற்று காவியமான இந்தப் படத்தை மாபெரும் பொருட்கள் செலவில் மணிரத்தினம் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தது.

ஏறக்குறைய 500 கோடியை தொட்டுவிட்ட இந்த படத்தின் வசூல் ஆனது மேலும் அதிகரிக்கலாம் என்று பாக்ஸ் ஆபீஸ் கூறுகிறது.நயன்தாராவிற்கு டேக்கா கொடுக்கக் கூடிய வகையில் திரிஷாவின் கேரக்டர் மிக அதிக அளவு ரீச் ஆகி உள்ளதால் லேடிஸ் சூப்பர் ஸ்டாரா? இல்லை திரிஷாவா? என்ற கேள்வி தற்போது கோடம்பாக்கம் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் எதிரொளித்து வருகிறது.

இதனை அடுத்து திரிஷா தற்போது ஐரோப்பிய தேசங்களுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அந்த சுற்றுப்பயணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் தனது வலைதள பக்கங்களில் பதிவேற்றி ரசிகர்களுக்கு விருந்து வைத்திருக்கிறார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு புகைப்படமானது வைரலாக தற்போது வலைத்தளத்தில் பரவி வருகிறது.

இந்தப் புகைப்படத்தை இவர் இத்தாலி நாட்டில் உள்ள பீசா நகரில் இருக்கும் சாய்ந்த கோபுரத்தின் பக்கத்திலிருந்து எடுத்துக் கொண்டிருக்கிறார். உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் எந்த சாய்ந்த கோபுரத்தின் அருகில் திரிசா நின்று கொண்டிருக்கும் அந்த புகைப்படம் தான் இப்போது வைரலாகி வருகிறது.

மேலும் சாய்ந்த கோபுரத்தை நோக்கி இரண்டு கைகளை காட்டி கோபுரம் சாய்ந்து விடாமல் இவர் முட்டுக் கொடுத்து பிடித்திருப்பது போல அளித்து இருக்கின்ற போஸ்சை பார்த்து குந்தவைப் பிராட்டி இவர் என்பதால் எந்த கோபுரத்தை சாய்ந்து விடாமல் நிமித்தி விடுவார், நாங்க தாங்கி பிடிக்க வரலாமா..? நக்கலாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

மேலும் இந்தப் புகைப்படத்தில் இவர் அழகு பன்மடங்கு கூறியிருப்பது போல தெரிகிறது.இதனை அடுத்து இவரது ரசிகர்கள் என்றும் 16 என்பது திரிஷாவுக்கு நிச்சயமாக பொருந்தும் என்று அவர்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …