நடிகர் திரிஷாவுக்கு திருமணம் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரபல தயாரிப்பாளர் வருண்மணியன் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் நடிகை திரிஷா.
ஆனால் இவருடைய திருமணம் நடக்கவில்லை. நிச்சயதார்த்தத்தோடு அவருடைய திருமணம் என்று போனது. இதனால் திருமணம் என்ற பேச்சை கேட்டாலே தெறித்து ஓடிய நடிகை திரிஷா தற்போது 40 வயதை நெருங்கி விட்ட நிலையில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கின்றது.
அந்த வகையில் கேரளாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகனை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் திரிஷா என்ற தகவல்கள் முதற்கட்டமாக வெளியாகி இருக்கின்றன.
மேலும் கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா தெலுங்கானா என பல்வேறு மாநிலங்களில் நகை கடை வைத்திருக்கும் அந்த தொழிலதிபரின் மகனை நடிகை திரிஷா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
40 வயதில் நெருங்கிவிட்ட த்ரிஷா திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு இதுதான் காரணம் என்று சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர் கூறியதாவது நடிகை திரிஷா தற்போது தன்னுடைய தோழிகளுடன் தான் வசித்து வருகிறார். அவர்களுடன் குடியும் குத்துமாக தன்னுடைய வாழ்க்கையை கழித்து வருகிறார்.
எங்கே ஒருவேளை திருமணம் செய்து கொண்டால் இப்படியான வாழ்க்கையை வாழ முடியாதென்று தான் திருமணம் என்றாலே வெறுத்து ஓடி வந்தார் நடிகை திரிஷா என்று பதிவு செய்திருந்தார் பயில்வான் ரங்கநாதன்.
இவருடைய இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். என்றாலும் கூட, மறுபக்கம் தன்னுடைய தோழிகளுடன் குடித்து கும்மாளம் போடும் நடிகை திரிஷாவின் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பயில்வான் ரங்கநாதனின் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக இருந்தன.
இந்நிலையில் நடிகர் திரிஷா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. எனினும் இது குறித்து திருஷா தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகைகள் குறித்து திருமணம் என்ற செய்தி இணையத்தில் வைரலாவது வாடிக்கைதான். அது போல நடித்த தற்போது த்ரிஷாவிற்கும் திருமணம் என்று இணையத்தில் சில தகவல்கள் வட்டமடித்து வருகின்றது.