இதில் எல்லாம் பிள்ளையார் பிடிக்கலாமா? அதை வழிபாடு செய்தால் இத்தனை நன்மைகளா?

எந்த ஒரு செயலும் விக்னமில்லாமல் முடிய வேண்டும் என்றால் விநாயகப் பெருமானை தொழுது தான் நடத்த வேண்டும் என்று பலருக்கும் நன்றாக தெரியும். எனவே தான் சுப காரியங்களை ஆரம்பிக்கும் போது பிள்ளையாருக்கு பூஜை செய்து விட்டே பிறகு மற்ற பணிகளை செய்வார்கள்.

 அப்படிப்பட்ட விநாயகர் பெருமானை கீழே குறிப்பிடக்கூடிய பொருட்களைக் கொண்டு மிக எளிதாக பிடித்து வைத்து அவரை பிரார்த்தனை செய்வதின் மூலம் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

மஞ்சள் பிள்ளையார்

மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வழிபடும் பழக்கம் காலம் காலமாக உள்ளது. எந்த ஒரு சுப நிகழ்ச்சியின் போதும் மஞ்சளால் பிள்ளையார் பிடிக்கப்பட்டு அவருக்கு பூஜைகள் செய்த பின்பே மற்றவற்றை தொடர்ந்து செய்வார்கள்.

 அத்தகைய மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வழிபாடு செய்தால் சகல சௌபாக்கியமும் கிடைப்பதோடு காரிய சித்தியும் பிள்ளையார் நமக்கு வழங்குவார் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

 குங்குமப் பிள்ளையார்

 மஞ்சளில் எப்படி பிள்ளையாரை பிடித்து வைக்கிறோமோ அது போலவே குங்குமத்தைக் கொண்டு பிள்ளையாரை பிடித்து வணங்கி வருபவர்களுக்கு செவ்வாய் தோஷம் அகலும்.

அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் படிப்பில் கவனத்தைச் செலுத்தாமல் இருந்தால் அவர்களை குங்கும பிள்ளையாரை பிடித்து வழிபட சொல்வதின் மூலம் படிப்பில் வல்லவராக மாறுவார்கள்.

 புற்று மண் பிள்ளையார்

புற்று மண்ணினை எடுத்து வந்து பிள்ளையார் பிடித்து வழிபடுவதன் மூலம் நமக்கு ஏற்படுகின்ற நோய்கள் முற்றிலும் விலகும்.

 அதுமட்டுமல்லாமல் விவசாய பூமியை வைத்து விவசாயம் செய்து வருபவர்கள் புற்றுமண்னால் செய்யப்பட்ட விநாயகரை வழிபடுவதன் மூலம் விவசாயம் செழிக்கும்.

 வெல்ல பிள்ளையார்

வெல்லத்தால் பிடிக்கப்பட்ட பிள்ளையாரை வைத்து வணங்கினால் உடலுக்குள் இருக்கும் கட்டிகளும், உடலுக்கு வெளியே இருக்கும் கட்டிகளும் கரைந்து நமக்கு வளம் ஏற்படும் என்று கூறியிருக்கிறார்கள்.

இங்கு கட்டிகள் என்று குறிப்பிடப்பட்டு இருப்பது கொப்பளங்கள் ஆகும்.

உப்பு விநாயகர்

உப்பினை பிள்ளையாறு போல் பிடித்து வழிபட்டு வந்தீர்கள் என்றால் உங்களுக்கு எதிரிகளின் தொல்லை இருந்தால் அது உடனடியாக நீங்கும். அது மட்டுமல்லாமல் வந்த நோய் வந்த வழி தெரியாமல் அப்படியே சென்று விடும்.

 விபூதியால் விநாயகர்

விபூதியை பிடித்து விநாயகரை செய்து நீங்கள் வழிபடுவதன் மூலம் உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய நோய்கள் உங்களை விட்டு விலகும்.

சாணத்தால் செய்யப்பட்ட விநாயகர்

மாட்டின் சாணத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிள்ளையாரை பிடித்து வைத்து நீங்கள் வணங்குவதின் மூலம் சகலதோஷமும் விலகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும்.

 வாழைப்பழத்தில் பிடிக்கப்பட்ட விநாயகர்

வாழைப்பழத்தில் பிடிக்கப்பட்ட விநாயகரை பிள்ளையில்லாத தம்பதிகள் வழிபடுவதன் மூலம் வம்சவிருத்தி உண்டாகி பிள்ளை பேறு கிடைக்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …