இனிமேல் ஃபுல் டைம் அரசியல் தான்… சினிமாவிற்கு பை… பை ….! உதயநிதி ஸ்டாலின் பேச்சால் ரசிகர்கள் சோகம்…!!

 2008 ஆவது வருடம் விஜய் நடிப்பில் வெளிவந்த  குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் தான் முதல்வர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின்.

 

இதனை அடுத்து இவர் ரெட் ஜெயன்ட் மூவிஸ்  என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி திரைப்படங்களை தயாரிப்பதில் களம் இறங்கினார்.அதுமட்டுமல்லாமல் தயாரித்த திரைப்படங்களை விநியோகித்து வரும் விநியோகஸ்தராகவும் செயல்பட்டார்.

மேலும் இவர் 2009 ஆம் ஆண்டு ஆதவன் படத்தில் ஒரு சின்ன ரோலில் அறிமுகமானார். அதன் பிறகு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழக ரசிகர்களின் இல்லத்தில் ஒரு பிள்ளையாகவே மாறிவிட்டார்.

 இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து மீண்டும் பல படங்களில் நடித்தார். அந்த வரிசையில் இவர் கதிர்வேலன் காதல், நண்பேண்டா, உள்ளிட்ட படங்களில் நடித்து தனது ரசிகர்களின் வட்டாரத்தை பெருக்கிக் கொண்டார்.

 சமீப காலமாக குறிப்பிட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவர் கண்ணே கலைமானே, சைக்கோ, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களை நடித்து ரசிகர்கள் மத்தியில்  பட்டையை கிளப்பினார்.

 இதனை அடுத்து தற்போது கலகத் தலைவன் என்ற படத்தில் சீரும் சிறப்புமாக நடித்திருந்தால் எனினும் பெரிய அளவு வெற்றியை இந்தப் படம் அவருக்கு கொடுக்கவில்லை.

ஏற்கனவே இவர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக  இருக்கும் இவர் இன்று அமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

 இதனை அடுத்து இவரது தந்தை ஸ்டாலின் மற்றும் திரை உலகப் பிரபலங்கள்  ரசிகர்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் வாழ்த்துக்களை கூறி வரக்கூடிய நிலையில் இனி திரை படங்களில்  நடிக்கப் போவதில்லை என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கடுமையான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் திரைப்படத்தில் நீங்கள் நடிப்பதற்காக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று பல ரசிகர்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …