பல முறை கருக்கலைப்பு.. மதமாற்ற முயற்சி..! ஸ்ரீவித்யா வாழ்க்கையில் விளையாடிய கொடூரன் இவரா..?

மகாலட்சுமி போல் இருக்கிறார் என்று சொல்லக்கூடிய வகையில் நடிகை ஸ்ரீவித்யா சாமுத்திரிகா அம்சத்தோடு திகழ்ந்தவர். இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அற்புதமான நடிகைகளில் ஒருவர். மேலும் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார்.

இந்நிலையில் ஸ்ரீவித்யா உலகநாயகன் கமலஹாசனை காதலித்த விஷயம் தற்போது இணையங்களில் லீக் ஆகி உள்ளது, உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவரது அம்மா கேட்டுக் கொண்டதற்கு இணங்க கமலஹாசன் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து மனம் உடைந்து போன நடிகை ஸ்ரீவித்யா, மலையாள திரைப்பட உதவி இயக்குனரான ஜார்ஜை திருமணம் செய்து கொண்டார். எனினும் இவரது மன வாழ்க்கை இவருக்கு சரியான வகையில் அமையவில்லை.

இதனை அடுத்து அண்மை பேட்டியில் இவரது அண்ணி விஜி, ஸ்ரீவித்யாவின் திருமண வாழ்க்கை பற்றி தெளிவுபடுத்தி இருக்கிறார். மேலும் இந்த பேட்டியில் மன உளைச்சல் மட்டுமல்லாமல் பல வகையான சித்திரவதைகளுக்கு ஸ்ரீவித்யா ஆளானார் என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார்.

நடிகை ஸ்ரீ வித்யா விரும்பி திருமணம் செய்து கொண்ட ஜார்ஜ் அவரை ஒரு பணம் தரும் ஏடிஎம் மிஷின் ஆகவே கருதி இருக்கிறார். இதற்கு காரணம் ஸ்ரீவித்யா இரண்டு, மூன்று முறை கர்ப்பம் தரித்த போது பிள்ளை பெற்றால் நடிக்க முடியாது என்று கூறி கர்ப்பத்தை கலைக்க வைத்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ஜார்ஜ் ஒரு கிறிஸ்தவர் என்ற காரணத்தால் தன்னையும் மதம் மாறச்சொல்லி வலியுறுத்தி இருக்கிறார். எனினும் மதம் மாற விரும்பாத ஸ்ரீவித்யா எளிதில் அவரிடம் இருந்து விவாகரத்தை பெற முடியாமல் பல்வேறு சித்திர வதைகளுக்கு ஆளானதாகவும், அடுக்கடுக்கான விஷயங்களை கூறி அதிர வைத்திருக்கிறார்.

மேலும் ஸ்ரீவித்யா ஜார்ஜின் தொந்தரவு தாங்காமல் தூக்க மாத்திரைகளை வைத்துக் கொண்டு சாகப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருந்ததாக ஸ்ரீவித்யாவின் ஹேர் டிசைனர் ஸ்ரீவித்யாவின் அம்மாவிடம் கூற அவரது அம்மாவும் வேக வேகமாக ஸ்ரீவித்யாவின் வீட்டுக்கு சென்று இருக்கிறார்.

அங்கு ஜார்ஜ் ஸ்ரீவித்யாவின் அம்மாவையும், ஸ்ரீவித்யாவையும் உள்ளே வைத்து பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். இந்த சூழ்நிலையில் மற்றவர்களின் உதவியோடு தான் அவர்கள் இருவரும் அந்த அறையை விட்டு வெளியேறினார்கள்.

கிறிஸ்துவ மதத்திற்கு மாற முடியாமல் திருமணம் ஆகி பத்து வருடங்கள் விவாகரத்தும் பெற முடியாமல், ஜார்ஜோடு மிகப்பெரிய போராட்டத்தையே போராடி ஒரு வழியாக விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்த ஸ்ரீவித்யா இறுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடுமையான அவஸ்தைகளை சந்தித்தார்.

இறந்து விடுவோம் என்று நினைத்த பிறகு அவருடைய இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த வேளையில் தான் தனது முன்னாள் காதலன் கமலஹாசனை அழைத்து மனதில் உள்ளதை பேசி கடைசியாக உயிரையும் விட்டு விடுகிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *