வணங்கான் திரைப்படத்திற்காக இயக்குனர் பாலா உடன் இணையும் இயக்குனர் அருவி அருண் பிரபு…!!

சூர்யா நடிக்கும் 41 வது படமான வணங்கான் படத்தை பாலா இயக்கி வந்த நிலையில் தற்போது அந்தப் படத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

 பிதாமகன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவும் பாலாவும் இனிய கூடிய இந்த படமானது ரசிகர்களின் கூடுதல் எதிர்பார்ப்புடன்  இருந்தது என கூறலாம். மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா படகோட்டி கதாபாத்திரத்தில் நடிக்க  இருந்தார்.

 எனவே இந்த படத்திற்கான ஷூட்டிங் க்கு சுமார் 40 நாட்கள் வரை கால்ஷீட் தந்திருந்த நிலையில் திடீரென பாதியிலேயே படப்பிடிப்பை நிறுத்தினார்கள்.

 இதற்கு காரணம் படப்பிடிப்பிற்கு வந்த சூர்யாவிற்கு படத்திற்கும் கதைக்கும் சம்மந்தம் இல்லாத பகுதிகளை பாலா படம் பிடித்ததே காரணம் என தெரிய வந்தது. எனவே பாலாவிடம் படத்தின் கதையை தெளிவாக உருவாக்கி பின் படப்பிடிப்பை துவங்குங்கள் என்று உறுதியாக சூர்யா சொல்லிவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் தற்போது வணங்கான் கதையை சூர்யா மாற்ற சொல்லி விட்டதால் புதிய கதையை பாலா எழுதி வரும் நிலையில் அவருக்கு உதவியாக அருவி படத்தில் இயக்குனராக பணிபுரிந்த அருண் பிரபுவும் இணைந்து அவருடன் இருக்கிறார்.

ஏற்கனவே அருவி படத்தை இயக்கியதின் மூலம் நல்ல பெயரை வாங்கி இருக்கும் அருண் பிரபு சூர்யாவின் அழைப்பின் பேரில் வணங்கான் திரைப்படத்தில் பணியாற்றுவதாக கூறப்படுகிறது.

 எனவே தற்போது பாலா மற்றும் அருண் பிரபு இணைந்து திரைக்கதை எழுதி முடித்ததும் வணங்கான் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என தெரியவந்துள்ளது. மீனவப் பிரச்சனையை மையமாகக் கொண்டு இருக்கும் இந்த கடைகளத்தில் சூர்யா இரண்டு வேடத்தில் நடிக்கிறார்.

 ஏற்கனவே ஒரு கேரக்டர் மாற்று திறனாளியாக சித்தரிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரியும். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடித்து வரும் நிலையில் படத்திற்கான இசையை ஜிவி பிரகாஷ் அமைக்கிறார்.

 மேலும் இந்த படத்தை 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.அதுமட்டுமல்லாமல் படம் தியேட்டரில் நேரடியாக வெளியாக வெளிவராமல் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் என்ற தகவல் தற்போது வெளிவந்திருக்கிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …