பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா தமிழில் நடிகர் சரவணன் அருள் நடிப்பில் வெளியான லெஜண்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தின் ஹீரோயினான நடிப்பதற்காக இவருக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த படத்தின் மூலம் ஒரு படத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பட்டியலில் ஊர்வசி ராவ்டேலா முதலிடத்தை பிடித்தார். நடிகர் லெஜண்ட் சரவணன் அருள் நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஊர்வசி ராவ்டேலா நடித்திருந்தார்.
மட்டும் இல்லாமல் தன்னுடைய தமிழ் அறிமுகத்திற்காக மிகப் பெரிய தொகையை சம்பளமாக வாங்கினார். தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நடிகை நயன்தாரா கூட தமிழ் படமொன்றில் நடிக்க 10 கோடி ரூபாய்தான் சம்பளம் பெறுகிறார்.
ஆனால் நடிகை ஊர்வசி ராவ்டேலா 20 கோடி ரூபாய் சம்பளம் பெற்று சரவணனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று சுமாரான வசூல் செய்தது.
இயக்குனர்கள் ஜேடி அண்ட் ஜெர்ரி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. மட்டுமில்லாமல் ஐந்து மொழிகளில் இந்த திரைப்படம் வெளியானது.
இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகர் விவேக் உட்பட நடிகர் நாசர், லிவிங்ஸ்டன், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி ராவ்டேலா-விற்கு தமிழ் சினிமாவில் நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இவருடைய பெயர் என்ன என்று கூட பலருக்கு தெரியாமல் போய்விட்டது. தொடர்ந்து தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார் நடிகை ஊர்வசி ராவ்டேலா.
இந்நிலையில் தன்னுடைய சில புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.