இதை மட்டும் செய்தால் போதும்..! – கொசு தொல்லை.. இனி இல்லை..!

 நம் வீட்டில் கொசு தொல்லை என்பது அன்று முதல் இன்று வரை பல்கி பெருகி வருகிறது. இதை தடுப்பதற்காக எண்ணற்ற வழிமுறைகளை நாம் ஃபாலோ செய்தாலும் கொசுக்களுக்கு தான் வெற்றி கிடைக்கிறதே உரிய நமக்கல்ல.

 கொசுக்களின் மூலம் எண்ணற்ற வியாதிகள் பரவி மனிதர்களின் ஆரோக்கியத்தை பெரும்பாலும் பாதிக்க கூடிய வகைகள் தான் இருக்கிறது. அப்படிப்பட்ட கொசுக்களை எளிதாக இயற்கை முறையில் உங்கள் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களைக் கொண்டே விரட்டி அடிக்கலாம்.

 நீங்கள் அவ்வாறு செய்வதின் மூலம் உங்கள் வீட்டிலேயே அந்த கொசுக்கள் கொத்துக்கொத்தாக மடியும் இல்லை என்றால் வீட்டுக்குள்ளே வராமல் வெளியே அப்படியே நின்று விடும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கொசுவை விரட்ட பயன்படும் பொருட்கள்

1.பெட்ரோலியம் ஜெல்லி என்று அழைக்கப்படும் வாசலின்

2.பெரிய வெங்காயம் ஒன்று

3.இரண்டு கற்பூரம்

இப்போது நீங்கள் எடுத்து வைத்திருக்கின்ற பெரிய வெங்காயத்தின் தோலை நன்றாக உரித்து கொண்டு ஆங்காங்கே சிறிது சிறிதாக கீரி வெட்டிக் கொள்ளவும். வெட்டும்போது வெங்காயத்தில் கீறல்கள் ஏற்பட வேண்டுமே ஒழிய வெங்காயம் பிளவுபடக்கூடாது.

 முழு நிலையில் அப்படியே இருக்க வேண்டும். இதனை அடுத்து நீங்கள் உங்களிடம் இருக்கும் வாசலினை எடுத்து அந்த வெங்காய கீரல்கள் மற்றும் நறுக்கல் மீது அப்படியே தடவி விடுங்கள்.

 இப்போது இந்த வெங்காயத்தில் இருக்கக்கூடிய சல்பரும் பெட்ரோலியம் ஜெல்லியும் சேர்ந்து  ஒரு குறிப்பிட்ட வேதிப்பொருளை வெளியேற்றும்.

 இந்த வேதிப்பொருளின் மனதை நுகரக்கூடிய கொசுக்கள் அதன் அருகில் வர முடியாது. அப்படி வந்தாலும் அது மரணத்தை தான் தழுவ வேண்டும். மேலும் இந்த இரண்டு பொருட்களோடு அல்லாமல் இந்த வெங்காயத்தை நீங்கள் அப்படியே நூலில் கட்டி அதன் மீது எடுத்து வைத்திருக்கும் கற்பூரத்தின் பொடியை நன்கு தூவி விட வேண்டும்.

 இவ்வாறு செய்வதின் மூலம் கொசுக்கள் ஒரு பைசா செலவில்லாமல் உங்கள் வீட்டுக்குள் வருவது நின்று போகு.ம் இதனால் உங்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது பக்க விளைவும் இல்லாதது.

இந்த வெங்காயத்தை நீங்கள் அப்படியே நூலில் கட்டி எந்த இடத்தில் தொங்க விடுகிறீர்களோ அந்த இடத்தில் இருக்கின்ற கொசுக்கள் அனைத்தும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி சென்று விடும்.

மேலும் அந்தப் பகுதியில் இருக்கின்ற பேனை நீங்கள் போடுவதன் மூலம் இந்த வேதிக்கலவையானது அரை முழுவதும் பரவுவதால் கட்டாயம் கொசுக்கள் தொல்லை என்ற அவதி உங்களுக்கு இல்லை. நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து பார்த்து இதை செய்து பாருங்கள் நிச்சயம் கை மேல் பலன் கிடைக்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …