“என்னது… கருந்துளசி-யில் குவிந்து கிடக்கும் அற்புத பயன்கள்..!” – ஒவ்வொன்றாக பார்க்கலாமா?

தெய்வீக மூலிகையான கருந்துளசி ஒரு கற்பக விருட்சம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த கருந்துளசியில் எண்ணற்ற நன்மைகள் மனிதர்களுக்கு கிடைக்கிறது.

 பொதுவாக துளசி எல்லா வீடுகளிலும் தற்போது வளர்க்கப்படுவது நன்கு தெரியும்.எனினும் கிருஷ்ண துளசியை விட கருந்துளசியில் எண்ணற்ற சத்துக்கள் இருப்பதால் நீங்கள் உங்கள் வீட்டில் எந்த துளசி செடியை வளர்த்து நல்ல பயனை அடைவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடிய அற்புத பயனை தரக்கூடிய இந்த கருந்துளசியை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

கருந்துளசி பயன்கள்

பயன் 1

சிறு குழந்தைகள் சளியால் பாதிக்கப்பட்டிருக்கும் போது அவர்களுக்கு ஆங்கில மருந்துகளை கொடுக்காமல் அந்த காலத்திலேயே இந்த துளசி சாறை தான் கொடுத்து வந்தார்கள். அதிலும் குறிப்பாக கருந்துளசி சாறை கொடுத்தால் சளி தொற்று இருக்கக்கூடிய கிருமிகள் அனைத்தும் அழிந்து சளி விரைவில் குணமாகும்.

பயன் 2

சைனஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கருந்துளசியை கொதிக்கின்ற நீரில் போட்டு ஆவி பிடிப்பதன் மூலம் அவர்களுக்கு மூக்கு அடைப்பிலிருந்து விடுதலை கிடைப்பதோடு மட்டுமல்லாமல் சளி, இருமல் போன்ற அனைத்து சுவாச சம்பந்தமான நோய்களும் நீங்கும்.

பயன் 3

ஆண்மை குறைபாட்டை சரி செய்யக்கூடிய அற்புத ஆற்றல் படைத்த கருந்துளசி காக்காய் வலிப்பு, தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக அமைகிறது. இந்த துளசியை சாறாக குடிப்பதன் மூலம் காய்ச்சல் காக்காய் வலிப்பு போன்றவை நீங்குகிறது.

பயன் 4

 தோல் வியாதிகளுக்கு இந்தச் சாறினை  சொறி சிரங்கு எந்த பகுதியில் இருக்கிறதோ அந்த பகுதியில் பூசி வர விரைவில் குணமாகும்.

பயன் 5

மலச்சிக்கல், வாய் துர்நாற்றம் போக வெறும் ஐந்து அல்லது ஆறு இலைகளை காலை எழுந்ததுமே வெறும் வயிற்றில் நீங்கள் மென்று தின்றால் உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாது. மற்றும் வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.

 மேலும் நீங்கள் இந்த இலைகளை வாயில் மெல்லும்போது வாயில் இருக்கக்கூடிய பாக்டீரியாக்களை அழிக்கக்கூடிய தன்மை இந்த துளசிக்கு இருப்பதால் வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.

பயன் 6

ஓசோன் படலத்தில் ஏற்பட்டிருக்கும் ஓட்டையை கூட சரி செய்யக்கூடிய அளவுக்கு சக்தி மிகுந்த இந்த கருந்துளசியை 48 நாட்கள் நீங்கள் உண்டு வந்தால் கட்டாயம் கபம், சுவாச சம்பந்தமான நோய்கள் நீங்குவதோடு உங்களது உடலில் இருக்கக்கூடிய நோய் எடுப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

பயன் 7

அந்தக் காலத்தில்  பெண்களின் வயிற்றில் குழந்தை இறந்து விட்டது என்றால் அதை வெளியேற்ற கருந்துளசியை உரளில் போட்டு இடித்து கசக்கி சாறினை எடுத்து அந்த சாரோடு  எள் எண்ணையை கலந்து உள்ளே கொடுப்பார்கள். அப்படி கொடுத்த கால் மணி நேரத்தில் இறந்த குழந்தை வெளியே வந்து விடும்.

இப்படிப்பட்ட அருமையான இந்த மூலிகையை நீங்கள் தினமும் எடுத்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற பயன்களை அடைக்கலாம் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …