“கண்ணுக்கு ஒளி தந்து ரத்தத்தை சுத்தம் செய்யும் பொன்னாங்கண்ணி..! – கட்டாயம் உணவில் சேர்த்துக்கோங்க..!

கீரைகளில் பல வகைகள் உள்ளது. அதனை  உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடைக்கிறோம். அந்த வரிசையில் பொன்னாங்கண்ணி கீரையில் தனித்துவமான குணங்கள் இருப்பதால் இதனை நீங்கள் உங்கள் உணவில் கட்டாயம் மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெற முடியும்.

மேலும் மருத்துவ குணம் நிறைந்த இந்த பொன்னாங்கண்ணி கீரைகள் பலவிதமான சத்துக்களும் தாதுப்பொருட்கள் உள்ளது. இதனால் தான் இதற்கு பொன்னாங்கண்ணி என்ற பெயர் வந்தது.

இந்த பொன்னாங்கண்ணிக் கீரையை நீங்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

பொன்னாங்கண்ணிக் கீரையில் நீர்ச்சத்து, கொழுப்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துக்கள் அதிகளவு காணப்படுகிறது. எலும்பு வளர்ச்சி, எலும்பு சிதைவை தடுப்பதற்கு இந்த கீரை உறுதுணையாக இருப்பதால் இந்த கீரையை நீங்கள் எடுத்துக் கொள்வதின் மூலம் எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் இருந்து நிவாரணம் பெற முடியும்.

வயிற்றில் ஏற்படும் புண்களை குணப்படுத்தும் ஆற்றல் மிக்க பொன்னாங்கண்ணி கீரை வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் ஏற்பட்டால் நீங்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை சமைத்து உண்பதின் மூலம் நிச்சயமாக புண்கள் குணமாகும்.

உங்கள் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தக்கூடிய தன்மை பொன்னாங்கண்ணிக் கீரைக்கு உள்ளது. எனவே உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு பொன்னாங்கண்ணி கீரையை அதிகமாக கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க குழந்தைகளாக அவர்களை மாற்றி விட முடியும்.

வளர் சிதை மாற்றத்தில் அதிகமான பணியை செய்யக்கூடிய இந்த பொன்னாங்கண்ணி கீரை உடலில் இருக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றக் கூடிய தன்மை மிக்கது.

சர்வ லோக நிவாரணியாக திகழக்கூடிய இந்த பொன்னாங்கண்ணி கீரையோடு மிளகு மற்றும் உப்பு சேர்த்து பச்சையாக மென்று திங்க உங்கள் உடலில் நல்ல மாற்றம் ஏற்படுவதை நீங்களே உணர்வீர்கள்.

உடலில் ரத்தத்தை சுத்திகரிக்க உதவக்கூடிய அற்புதமான மூலிகையான இந்த பொன்னாங்கண்ணி கீரையை நீங்கள் மறவாமல் வாங்கி உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுக்களை எளிதில் வெளியேற்றலாம்.

உடல் தேறாமல் அப்படியே ஒல்லியான உடல் வாக்கை கொண்டிருப்பவர்கள் இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் எலும்புகள் வலிமையாவதோடு உடல் எடையும் அதிகரிக்கும்.

இதயம் மற்றும் மூளைக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய தன்மை இந்த கீரைக்கு உள்ளதால் நீங்கள் இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதே இன்றியமையாததாகும்.

மேலும் இந்த கீரையானது பார்வை திறனை மேம்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. அதுமட்டுமில்லாமல் பார்வை நரம்புகளை வலிமைப்படுத்த கூடிய தன்மை இதற்கு உள்ளது.

எனவே இன்றும் கிராமப்புற பகுதிகளில் பார்வை கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் தினமும் ஒரு கைப்பிடி அளவு பொன்னாங்கண்ணி கீரையை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது வழக்கம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …