நகைச்சுவை நடிகரான போண்டாமணி கிட்னி பெயிலியர் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இவருக்கு ஏற்படுகின்ற மருத்துவ செலவுகளை சினிமா பிரபலங்கள் சிலர் தந்து உதவி செய்தனர்.
மேலும் நடிகர் தனுஷ் மற்றும் விஜயசேதுபதி தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து இவரது சிகிச்சைக்கு உதவி செய்தார்கள். தற்போது சிகிச்சை முடிந்து மிக ஆரோக்கியமான நிலையில் வீடு திரும்பியுள்ள போண்டாமணி தான் முன்பை விட தற்போது நலமாக இருப்பதாகவும் தனக்கு பண உதவி செய்த அத்தனை பேருக்கும் நன்றியை தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில் ஒரு வருத்தமான விஷயத்தை தெரிவித்தது மிகவும் சோகமாக இருந்தது. நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்த இவர் வடிவேலுடன் பல நகைச்சுவைகளை பேசி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.
குறிப்பாக நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த மருதமலை திரைப்படத்தில் பிச்சைக்காரனாக போண்டாமணி நடித்திருப்பார் அவரின் பணத்தை ஆட்டையைப் போடும் போலீஸ்காரங்க வடிவேலு நடித்த அந்த காமெடி இன்றளவும் எல்லோருக்கும் நினைவில் இருக்கும்.
மேலும் தன்னுடன் நெருங்கி பழகி இருந்த வடிவேல் தன்னுடைய சிகிச்சைக்கு ஒரு சிங்கிள் பைசா கூட கொடுக்காமல் இருந்ததைத் தான் அவர் தற்போது வருத்தத்தோடு வெளிப்படுத்தி இருக்கிறார்.
அண்மையில் ஒரு பேட்டியில் போண்டாமணிக்கு உதவி செய்வீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது நான் உதவாமல் வேறு யார் உதவுவார் கண்டிப்பாக நான் உதவி செய்வேன் என்று வாய்ச்சவடால் பேசிய நடிகர் வடிவேலு இதுவரை சிங்கிள் பைசா கூட கொடுக்காமல் எஸ்கேப் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து சில ரசிகர்கள் இவர் வெறும் வாய்ச்சவடால் தான் பணத்தை அப்படியே மூட்டை கட்டி வைத்துக் கொள்வார் போல யாருக்கும் உதவ மாட்டார். சுட்டுப்போட்டாலும் இவருக்கு பத்தி வராது என்று அடுக்கடுக்கான நெகட்டிவ் கமெண்ட் தந்து அதிர வைத்திருக்கிறார்கள்.