“நோ பட வாய்ப்பு…” – வடிவேலு-வின் வீழ்ச்சிக்கு யார் காரணம்..?

வைகை புயல் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் வடிவேலுவுக்கு, காமெடி நடிப்பில் இரண்டாம் இன்னிங்க்ஸ் விளையாட, தமிழ் சினிமா உலகம் வாய்ப்பளித்தும், அவரது அடாவடியான நடவடிக்கைகளால், மீண்டும் அவர் கோடம்பாக்கத்தை விட்டு, வண்டியை மதுரைக்கு கிளப்பும் நிலை உருவாகி வருகிறது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் வெளுத்து வாங்கியவர் நடிகர் வடிவேலு. பல படங்களில் ஹீரோவை காட்டிலும், படத்தில் இவரது காமெடி நடிப்பே பிரதானமாக இருக்கும்.

முன்னணி நடிகர்கள் மட்டுமின்றி, புதுமுக நடிகர்களில் படங்களில் கூட காமெடி நடிப்புக்காக, வடிவேலு நடிக்க காரணம், அவரது இமேஜ் காரணமாக, படம் நன்றாக ஓடி, அதன்மூலம் படத்தின் புதுமுக நாயகனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பப்ளிசிடி கிடைக்கட்டும் என்ற நோக்கம்தான்.

அந்த அளவுக்கு, அவரது காமெடி புகழ் கொடி கட்டி பறந்தது. காமெடியனாக ரசித்த வடிவேலுவை, இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில், கதாநாயகனாகவும் மக்கள் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்திரலோகத்தில் நா. அழகப்பன், தெனாலிராமன் போன்ற படங்கள், இம்சை அரசன் 23ம் புலிகேசி அளவுக்கு, ரசிகர்கள் மத்தியில் ஏனோ பேசப்படவில்லை. ஆனால், அந்த படங்களிலும் வடிவேலு நடிப்பு மிக சிறப்பாகவே இருந்தது.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, வடிவேலு பட வாய்ப்புகளின்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகம் சார்ந்த சில பிரச்னைகளால், அவருக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டது என்பதுதான் உண்மை.

இந்நிலையில், மீண்டும் அவருக்கு ‘நாய்சேகர் ரிடர்ன்’ படம் மூலம்,  திரை பிரவேசம் அமைந்தது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. இந்த படத்தில், பழைய பாணியில் வடிவேலுவின் காமெடி நடிப்பு இல்லை என்பதால், ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர்.

இதையடுத்து, தற்போது சந்திரமுகி படத்தின் 2ம் பாகம் மற்றும், உதயநிதி ஸ்டாலினுடன் நடித்த மாமன்னன் படங்களில், வடிவேலு நடித்துள்ளதால், அந்த படங்களில் அவரது காமெடி நடிப்பு, ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், வடிவேலு படப்பிடிப்பு தளங்களில் முன்பு போல் நல்ல நடிகராக நடந்துகொள்ளாமல், ஏகப்பட்ட அடாவடி செய்வதாக, புகார்கள் எழுந்துள்ளது. கால்ஷீட் பிரச்னை செய்வதாகவும் இயக்குநர்கள் தரப்பில் குற்றச்சாட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், வடிவேலுவிடம் நேரடியாக இதுபற்றி பேச தயங்கும் படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், வடிவேலுவின் உதவியாளர்களிடம் ‘லெப்ட் அண்ட் ரைட்’ வாங்கி விடுகின்றனர். இதனால், சகட்டு மேனிக்கு திட்டு வாங்கும் வடிவேலு உதவியாளர்கள், ‘துண்டை காணோம், துணியை காணோம்’ என ஓட்டம் பிடிக்கின்றனராம்.

மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வடிவேலு வருவார் என்று எதிர்பார்த்தால், கிடைக்கிற பட வாய்ப்புகளை எல்லாம் இப்படி அடாவடி செய்து, அவரே கெடுத்துக்கொள்கிறாரே. என வடிவேலுவின் தீவிர ரசிகர்கள் தலையில் அடித்துக்கொண்டு புலம்பித் தீர்க்கின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …