“அந்த சீனே இல்ல.. பேசாம இருங்க..” – அலப்பறை கொடுத்த வடிவேலு.. அடக்கி வாசிக்க வைத்த மாரி செல்வராஜ்..!

அலப்பறைகளுக்கு பஞ்சம் இல்லாத நடிகர் என்றால் அது நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலு [Vadivelu] என்பது அனைவருக்கும் எதார்த்தமாக எளிதில் தெரிந்துவிடும். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக பட வாய்ப்புகள் இல்லாமல் அலைந்த இவர் தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நாயகர்களின் வரிசையில் முன்னணியில் இருப்பவர்.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு இவர் இல்லாத படமே இல்லை என்று கூறும் அளவிற்கு நகைச்சுவையில் முடி சூடா மன்னராக திகழ்ந்த இவர் காமெடியை பார்ப்பதற்கு என்றே பல படங்கள் ஓடி வெற்றி பெற்றிருக்கிறது.

Vadivelu

மேலும் முன்னணி நடிகர்கள் எல்லோருமே இவர் தங்களது படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக காத்திருந்த நிலைகளும், கால் சீட்டுக்காக தவம் கிடந்த நாட்களும் உண்டு.

இதனை அடுத்து புகழின் உச்சியில் இருந்த இவருக்கு தலைக்கணம்  ஏறி இருந்ததின் காரணமாக யானை தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வது போல தேவையில்லாத சர்ச்சைகளிலும், பேச்சுக்களிலும் ஈடுபட்டதன் காரணமாக திரையுலகிலிருந்து ஒதுக்கப்பட்டார்.

திரையுலகம் ஒட்டுமொத்தமாக இவரை ஒதுக்கி வைத்த போதும் திரைப்படங்களில் நடிக்காத சமயங்களில் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களில் ஆக்கிரமித்து தனது வெற்றி கொடியை நாட்டிய அற்புத நடிகர் என்றால் அது மிகையாகாது.

Vadivelu

அந்த வகையில் மீண்டும் சினிமாவில் தற்போது ரீஎன்ட்ரி கொடுத்திருக்கக்கூடிய இவர் மீம்ஸ் க்கு கிடைத்திருக்கும் வரவேற்பை போலவே சினிமாவிலும் வரவேற்பு அமோகமாக இருக்கும் என்று ஓவராக எப்போதும் போல அலப்பறையில் ஈடுபட்டு விட்டார்.

அதற்கு தக்க பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் மண்ணை கவியது இவருக்கு ஒரு மிகப்பெரிய பாடமாக அமைந்திருக்கும்.

#image_title

இதனை அடுத்து தற்போது உதயநிதி ஸ்டாலினோடு இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வரும் இவர் மொத்தமாக சரண்டர் ஆகி எந்த பிரச்சனையும் செய்யாமல் நடிப்பதற்கு காரணம் இவர் நிமித்தமாக சில பிரச்சனைகளை பஞ்சாயத்து பண்ணிதே உதயநிதி ஸ்டாலின் என்பதால் தான்.

எனவேதான் மாமன்னன் படத்தில் படு ஈடுபாடாக நடித்து வருவதாக கூறியிருக்கும் இவர் இந்த படத்தை ஒழுங்காக நடிப்பதின் காரணமாக நல்ல வெயிட்டான கேரக்டர் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேரக்டரை சீரும் சிறப்புமாக முடித்து மீண்டும் மக்கள் மத்தியில் ஒரு ரவுண்டு வருவார் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …