ரெக்கார்ட் நீங்கியும் அலப்பறையை நிறுத்தாத… நடிகர் வடிவேலு முழிக்கும் தயாரிப்பாளர்கள்…!

 பஞ்சமில்லாத காமெடியை தந்தவர் நடிகர் வடிவேலு, வைகை புயல் வடிவேலு என்று அன்பாக அழைக்கப்படும் இவர் தற்போது ரெட் கார்ட் நீக்கப்பட்டு படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இன்னும் அவர் நடித்த படங்கள் திரைக்கு வரவில்லை.

 தற்போது கைவசம் ஐந்து ஆறு படங்களை வைத்துக்கொண்டு அதில் படு பிஸியாக நடித்து வரும் இவர் அடுத்தடுத்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க காத்திருக்கிறார்.

 இதனை அடுத்து தற்போது உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வரும் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்திலும் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து சந்திரமுகி 2 படத்திலும் பட்டையை கிளப்பி நடித்து வருகிறார்.

 ஏற்கனவே சந்திரமுகி ஒன்றில் ரஜினியோடு இணைந்து இவர் செய்த காமெடி என்றும் கலக்கலாகவே உள்ளது. அதுபோலவே சந்திரமுகி இரண்டிலும் இவர் வேறு லெவலில் காமெடி டிராக்டர் வந்து அசத்துவார் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

 மேலும் இவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் காமெடி கௌபாய் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.

 தற்போது இவருக்கு மிகப்பெரிய ஹீரோக்களோடு நடிக்கின்ற வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும் வண்ணத்தில் இருக்கக்கூடிய வேளையில் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி படத்தில் நடிக்க வைக்க வடிவேலுவை அணுகி இருக்கிறார்கள்.

 தற்போது ஒரு மாசான இடத்தில் இருக்கும் விஜயசேதுபதியுடன் நடிக்கும் போது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சரியான நேரம் பார்த்து பட குழுவுக்கு ஒரு செக்கை வடிவேலு வைத்திருக்கிறார்.

 அது என்னவென்றால் இது போன்ற படங்களில் நடிப்பதற்கு இவர் சம்பளங்களை கோடியில் கேட்கிறாராம். இதுவும் விஜயசேதுபதியோடு நடிப்பதற்கு ஐந்து கோடி என்று அவர் அச்சாரம் போட்டு இருப்பதை பார்த்து கிறுத்து போய் இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

 இதைத்தொடர்ந்து போகிற போக்கை பார்த்தால் வடிவேலு கதாநாயகருக்கு இணையான சம்பளத்தை கேட்பார் போல என்ற பேச்சு கோடம்பாக்கம் அதிகமாக பேசப்படுகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …