காமெடி நடிகர் வடிவேலுக்கு விரைவில் தேசிய விருதா?… அட்ரா சக்க அப்படி போடு…!!

கவுண்டமணி, செந்தில் காமினேஷனில் அடக்கிய காமெடி டிராக்குகளின் சீசன் ஓய்ந்துவிட அவருக்கு பின்னால் யார் என்ற கேள்விக்கு நான் வந்துட்டேன்னு சொல்லு என்ற விதத்தில் வைகைப்புயல் வடிவேலு நகைச்சுவை மன்னராக பல படங்களில் ஜொலித்திருக்கிறார்.

 இவருக்கு ஆரம்ப காலத்திலிருந்தே ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளூர இருந்திருக்கிறது. அந்த ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக தற்போது இவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

 தமிழ் திரையுலகை பொருத்தவரை அசைக்க முடியாத, தவிர்க்க முடியாத காமெடியன் வரிசையில் அச்சாணி போல் அமர்ந்திருக்கக் கூடியவர் தான் நடிகர் வடிவேல்.

இதனை அடுத்து ரெட் கார்ட் போடப்பட்டதால் படங்களில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது ரெக்கார்ட் நீக்கப்பட்டதால் தொடர்ந்து படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.

 குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் படத்தில் இவர் காமெடியில் பிச்சு உதறி இருக்கிறாராம்.

அரசியலை முக்கிய கதையம்சமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தில் வடிவேலுக்கு முக்கிய பாத்திரம் உள்ளது என்றும் இவர் காமெடி மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் மிக நேர்த்தியாக வெளுத்து கட்டி இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

 மேலும் உதயநிதி ஸ்டாலின் செல்லும் பகுதிகளில் எல்லாம் தற்போது இந்த படம் பற்றிய கேட்டு வருவதால் அவர் அதைப் பற்றி மிகவும் சிறப்பாக கூறி வருகிறார். அது மட்டுமல்லாமல் தன்னோடு நடித்திருக்கும் வடிவேலு பக்காவாக ஸ்கெட்ச் போட்டு இதில் பணி புரிந்திருக்கிறார்.

 எனவே கூடிய விரைவில் அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று சொல்லியதை அடுத்து திரையுலக வட்டாரமே அந்த திரைப்படத்தை பார்க்க ஆவலாக காத்திருக்கிறது.

இதனை அடுத்து பல பிரச்சனைகள் காரணமாக திரையுலகை விட்டு வெளியேறிய வடிவேலு இந்த திரைப்படத்தின் மூலம் ஒரு நல்ல கம்பேக்கை தருவதோடு பல விருதுகளையும் வாரி குவிப்பார் என்ற செய்தி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …