இதனால் தான்.. பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்துவை கிட்ட கூட சேர்க்கலயாம்..!

தமிழ் அறிஞர் கலைஞர் போற்றிய சிறப்பான கவிஞர் என்றால் அது வைரமுத்து தான் இவர் திரைப்பட பாடல்கள் பலவற்றை எழுதி பெயர் பெற்றவர்.மேலும் பல விருதுகளை பெற்றவர்.

கவிப்பேரரசு என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் கவிஞர் வைரமுத்துவிற்கு பொன்னியின் செல்வனில் ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற சர்ச்சைகள் தற்போது எழுந்திருக்கிறது.

 இவரின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் முத்து முத்தாக இருக்கும் சில சின்ன விஷயங்களைக் கூட நேர்த்தியான முறையில் கவிதையாக வடிப்பதில் இவர் வல்லவர் அதற்கு உதாரணமாக இவரது கள்ளிக்காட்டு இதிகாசத்தை நாம் எடுத்து பேசலாம்.

அது மட்டுமல்லாமல் சின்ன சின்ன ஆசை என்ற பாடல் வரிகளில் காதலை வெளிப்படுதிய வீதம் அருமை.மேலும் காதல் சோகம், அம்மா சென்டிமென்ட் போன்ற வரிசையில் இவர் எழுத்துக்கள் அனைத்துமே மிகவும் அருமையான முத்துக்களாக தான்  இருந்திருக்கிறது.

 இவரது கவிதைகளைப் படிக்காத தமிழர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு சொற்திறன் மிக்க கவிதைகளை எழுதுவதில் வல்லவர்.

கவிஞர்கள் என்றாலே இரசனைக் தன்மை அதிகமாக தான் இருக்கும். அது போல  ஒவ்வொரு கலைஞனுக்கும் அவன் கவிஞராக இருந்தாலும் ஒரு வீக் பாயிண்ட் கட்டாயமாக இருக்கும். அந்த வகையில் கவிஞர் வைரமுத்துவின் வீக் பாயிண்ட் பெண்கள்தான்.

சில காலங்களுக்கு முன்னால் பாடகியானார் சின்மயி இடம் தனது சில்மிஷம் வேலைகளை காட்ட ஆரம்பித்திருக்கிறார். இதுபோல பல பெண்களிடம் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து மிக தைரியமாக மீடியாக்களில் இதனை வெளிப்படுத்திய சின்மயி அவரின் புகழுக்கு மாபெரும் கலங்கத்தை ஏற்படுத்தினார்.

 இதனால் வைரமுத்துவிற்கு திரை உலகில் ஒரு மிகப்பெரிய தாக்கமும் பாதிப்பும் ஏற்பட்டது. ஏற்கனவே சுகாசினியின் தோழி என்பதால் அவர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தான் இவரால் பொன்னியின் செல்வனை ஒரு வார்த்தை கூட எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் என்று தற்போது திரை வட்டாரங்களில் பேச்சுக்கள் நிலவி வருகிறது.

பெண்ணைத்  தூக்கியதால் ராவணனும் பெண்னை  தொட்டுப் பார்க்க விரும்பியதால் துரியோதனனும் பட்ட கதை போலத்தான் இவரது கதை இப்போது ஆகிவிட்டது.இது இவருக்கு இனி சினிமாவில் எழுத வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …